Saturday, March 28, 2009

கீதோபதேசம்!


அர்ஜுனர்: பரமாத்மாவை அடைவதற்க்கான வைராக்கியம் எப்படி ஏற்படும்?

ஸ்ரீ க்ருக்ஷ்னர்: வைராக்கியத்திற்குப் பல ஸாதனங்கள் உள்ளன. அவற்றில் சில‍ 

1. உலகியல் பொருட்களை ஆராய்ந்து அவற்றில் அழகு, அன்பு, ஸுகம் இல்லை என்பதை உணர வேண்டும். 

2. அவை பிறப்பிறப்பு, மூப்பு , நோய் முதலிய துக்கங்களும், குற்றங்களும் நிறைந்தவை; நிலையற்றவை; பயம் தருபவை என்று அறிய வேண்டும்.  

3. உலக வாழ்க்கை, பகவான் இவ்விரண்டின் தத்துவத்தை நிரூபிக்கின்ற அறநூல்களைக் கற்க வேண்டும்.  

4. தீவிர வைராக்கியம் உள்ள பெரியோர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். அத்தகைய சேர்க்கை கிடைக்காவிடில் வைராக்யம் நிறைந்த அவர்களுடைய படங்களையும், சரித்திரங்களையும் நினைத்து, மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.  

5. உலகில் உள்ள மிகப்பெரிய கட்டிடங்களின் இடிபாடுகளையும், பெரிய நகரங்களும், கிராமங்களும் அழிவதையும் பார்த்து உலகம் கணத்தில் அழியக்கூடியது என்று உணர வேண்டும்.  

6. ப்ரம்மம் ஒன்றே பகுதியற்றது; இரண்டற்றது என்ற ஞானம் பெற்று, மற்றவை எதற்கும் இருப்பே இல்லை என்று அறிய வேண்டும்.  

7. தகுதியுள்ள பெரியோர்களிடமிருந்து, பகவானுடைய வர்ணனைக்கடங்காத குணங்கள், ப்ரபாவங்கள், தத்வம், ப்ரேமை (அன்பு), ரகசியங்கள், அவருடைய லீலா சரித்திரங்கள், தெய்வீக அழகு, இனிமை இவற்றைத் திரும்பத் திரும்பக் கேட்டறிந்து, அவற்றில் முற்றும் ஈடுபட்டு, மூழ்கி விட வேண்டும். இவ்விதம் இன்னும் பல ஸாதனங்கள் உள்ளன.

No comments: