Sunday, May 31, 2009

வள்ளுவர் வாக்கு


பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் 
திண்மையுண் டாகப் பெறின்.  

தான் கொண்ட கணவனுக்கு துரோகம் செய்யாத வாறு கற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால் அந்தப் பெண்ணைவிடப் பெருமை மிக்கது உலகில் என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை.

திருக்குறள்; 
அறத்துப்பால் ‍- இல்லறயியல்

இந்து திருமணத்தில் தாலி கட்டும் போது சப்தமாக மேளம் வாசிப்பது ஏன்?


இந்து தர்மத்தின் எந்த சடங்கும் மூடநம்பிக்கை கிடையாது. இந்து திருமணத்தில் தாலி கட்டும் போது சப்தமாக மேளம் வாசிப்பது ஏன் தெரியுமா?  

தாலி கட்டும் நேரத்தில் அமங்களமான வார்த்தைகள் எந்த மூலையிலிருந்தும் கேட்கக் கூடாது. மாங்கல்யம் சூட்டப்படும் போது ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒரு தாய் தன்னுடைய மகனையோ மகளையோ மற்றவர்களையோ பார்த்து, சனியனே நாசமாய்ப்போக என்று திட்டக்கூடும். அந்த அமங்களமான வார்த்தைகள் மணமக்களின் காதில் விழக்கூடாது. 

எந்த மூலையிலிருந்தும் தவறான வார்த்தை விழக்கூடாது என்பதற்க்காகவே அங்கே மேளம் கொட்டப்படுகிறது - கண்ணதாசன்; அர்த்தமுள்ள இந்து மதம்.


இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

Friday, May 15, 2009

அக்பர் பீர்பால் கதைகள்


ஒரு நாள் அக்பரும் பீர்பாலும் மாறு வேடத்தில் நகர்வலம் வந்தனர். அப்போது குருடர்களும், உடல் ஊன‌முற்றவர்களும், வயோதிகர்களுமாகப் பலர் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தனர்.

அக்பர் மிகவும் வேதனை அடைந்தார். பீர்பாலைப் பார்த்து, "பீர்பாலே, இவர்களைப் பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.  

இருவரும் ஆலோசனை செய்து அரசாங்க சார்பில் அவர்களுக்கு இலவ‌சமாக உணவு வழங்குவது என்று முடிவு செய்தனர். 

அதன் படி ஊனமுற்றோருக்கும் ஆதரவ‌ற்ற முதியவர்களுக்கும் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

நாளுக்கு நாள் பிச்சைக்காரர்கள் கூட்டம் கணக்கில்லாமல் அதிகமாகியது. உழைக்க விரும்பாத சோம்பேறிகள் ஊனமுற்றவர்கள் போல் வேடமிட்டு இலவச உணவை உண்டு காலத்தைப் போக்க ஆரம்பித்து விட்டனர்.  

அரசு உணவிற்காக செலவிடும் தொகை நாளுக்கு நாள் பெருகி கருவூலமே காலியாகும் நிலை ஏற்பட்டு விட்டது. பயந்து போன அக்பர் அவசரமாக பீர்பாலுடன் ஆலோசனை நடத்தினார். போலிப் பிச்சைக்காரர்களைக் கண்டறிவது எப்படி என்று பீர்பால் சிந்தித்தார். "அரசே, நாளை மதியம் இதற்கு முடிவு கட்டி விடுவோம்" என்றார். 

மறுநாள் இலவச உணவு உண்பதற்காக எண்ணற்றவர்கள் கூடினர். அப்போது உணவு அளிப்பது ஒரு மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டது. இதனால் கூச்சல் குழப்பம் ஏற்ப்பட்டது. 

அப்போது ஒரு அதிகாரி கூட்டத்தினரைப் பார்த்து "இன்று முதல் வடக்கேயுள்ள புதிய சத்திரத்தில் உணவளிக்கப்படும்" என்று தெரிவித்தார். இதனைக் கேட்ட போலிப் பிச்சைக்காரர்கள் பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு அலறியடித்து புதிய சத்திரத்துக்கு ஓடினர்.  

உண்மையாகவே கண்பார்வையற்றவர்களும், ஊனமுற்றவர்களும் மட்டுமே அங்கேயே இருந்து விட்டனர். அவர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு போலிப் பிச்சைக்காரர்கள் எவருமே அங்கு வருவதில்லை. 

பீர்பாலின் சமயோசித அறிவாற்றலை எண்ணி அக்பர் வியந்தார்.

Saturday, May 9, 2009

தமிழ் சினிமாவில் பிராமணர்கள் - பாகம் 3


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அற்புதமான கலைஞர். மிகவும் நல்ல மனிதராக அறியப்படுபவர். தன்னை அவமதிக்கும் எதிரிகளுக்கும் நட்புக்கரம் நீட்டுபவர். இப்படி எல்லா உயர்ந்த குணங்கள் கொண்ட இந்த நல்ல மனிதரையும் பிராமண கதாநாயகியை மணக்கும் பாத்திரத்தில் நடிக்கும் ஆசை விட்டு வைக்கவில்லை.

வீரா. இவர் நடித்த திரைப்படம். படத்தின் முக்கிய கதையே ரெண்டு பொண்டாடி. இப்படத்தில் கையாளப்பட்ட முக்கிய அம்சம் நகைச்சுவை. இந்த நகைப்புக்கும் முக்கிய கதாபாத்திரமாக பயன்படுத்தப்பட்டது பிராமண அடையாளம். இது இந்திய மொழிகளில் வேறெந்த மொழி திரைப்படத்துறையிலும் இல்லாத துவேஷம். நகைப்புக்கும், கேலிக்கும், துவேஷத்திற்க்கும் பிராமண அடையாளங்கள்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சூப்பர்ஸ்ட்டாரும் இதில் விதிவிலக்கில்லாமல் விளையாடிவிட்டார். இதற்க்கு முன்னரே உழைப்பாளி என்ற படத்திலும் நகைச்சுவைக்காட்சிக்காக "பகவான் போகச்சொன்னார், போனேன்" என்றொரு பிராமணரைப் பயன்படுத்தி சிரிப்பு மூட்டினார். (நடித்தவரும் அசல் பிராமணரே, அதுபற்றிய விமர்சணங்களும் வரும் பதிப்புகளில் பார்க்கலாம்). இப்படி பிராமண அடையாளங்களை சிரிப்பு பொருளாக பயன்படுத்த யாரும் பாரபட்சமே காட்டவில்லை.

ரஜினிகாந்த் அவர்கள் மனதறிந்து யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் என்பது அறிந்ததே. அவர் நல்லவர் தான். கோழி மிதித்து குஞ்சு சாகாது தான். ஆனால் வலிக்கிறதே. அது கோழிக்கு தெரியுமா?



ஆர்.பார்த்திபன். பாக்கியராஜ் அடைகாத்து பொறித்தனுப்பியவர் அல்லவா. "இது நம்ம ஆளு" எடுத்து நமது குரு மிகவும் புகழும் பணமும் சம்பாதித்ததைப் போல தாமும் சம்பாதிக்கவேண்டும் என்று இவருக்கு ஆசை இருக்காதா?. இவரும் பிராமண கலாச்சார அழிப்பில் தன் பங்கிற்க்கு குதித்தார். பொண்டாட்டி தேவை. இவரது பொழுது போக்கு மற்றும் சென்டிமென்ட் திரைப்படம். ஒரு ஏழை பிராமணப் பெண்ணை கண்டெக்டரான இவர் காதலிப்பார். அந்தப் பெண் வீட்டில் இவளது சம்பளத்தில் தான் குடும்பமே நடக்கிறது. அதை விடுவதற்கு மனமில்லாமல் அவளது அப்பாவே வரும் வரன்களையெல்லாம் கலைத்து விடுகிறார். இப்படிப்பட்ட குடும்பத்தில் இருக்கும் இந்தப் பெண்ணை பார்த்திபன் எப்படி காப்பாற்றி திருமணம் செய்து கொள்கிறார் என்பது கதை. கூடவே பிராமணர்களுக்கு புத்தி சொல்வதும் தமிழ்ப்பட சட்டப்படி நடக்கும். போதாக்குறைக்கு பிராமணர்களின் பாஷையை பார்த்திபனும் படத்தில் அவ்வப்பொழுது கிண்டலாக பேசுவார்...




இப்படி பிராமணர்களுக்கு புத்தி சொல்லி பிராமண கலாச்சாரத்தை கேலி செய்யும் அற்புதத்தை நிகழ்த்தி பேர்வாங்கினார் பார்த்திபன். நீங்கள் நினைக்கலாம். பெற்றோர்கள் பணத்திற்க்காக பெண்ணிற்க்கு திருமணம் செய்யாமல் இருந்தால் அது இப்படித்தானே முடியும். இதில் பார்த்திபனின் தவறென்ன? தமிழ் நாட்டில் பிராமணர்கள் மட்டும் தான் ஏழைகளாக இருக்கிறார்களா?. ஏன் பார்த்திபன் என்ன ராஜ குடும்பத்து இளவரசனா?. ஏழை பிராமணப் பெண்ணுக்கு வாழ்வு கொடுக்கும் தன் கற்பனையை நிகழ்த்திக்காட்ட. ஏழைக்குடும்பங்கள் எல்லா ஜாதியிலும் இருக்கும் போது பிராமணர்கள் வாழ்வு மட்டுமே சந்தைக்குக் கொண்டுவரப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது தமிழ் சினிமாவில். சமீபத்தில் "ஸ்லம் டாக் மில்லியனர்" என்ற படத்தைப் பற்றி அமிதாப்பச்சன் கூறிய விமர்சனம் என்ன? இந்தப்படம் இந்தியாவின் ஏழ்மையை கேலி செய்யும் படம் என்று கூறினார். பலரும் இதை ஆமோதித்தனர். வெள்ளையர்கள் இந்தியாவை அவமானப்படுத்தும் அதிகப்பிரசங்கித்தனம் இந்தப்படம் என்று கண்டனக்குரல்களும் வந்தன. அதே போல் தான் இந்தப்படத்திலும் பிராமணர்களின் ஏழ்மை கேலி செய்யப்பட்டது. வியாபாரம் ஆக்கப்பட்டது. பிராமணர்கள் உட்பட பல ஜாதிக்காரர்களின் குடும்பங்களிலும் இப்படி நிலை இருந்தாலும் பிராமண அடையாளங்களே பிரதான வியாபார‌ப்பொருளாகத் தமிழ் சினிமாவில் உபயோகப்படுத்தப்படுவது கண்டனத்திற்குரியது.

இத்துடன் விட்டாரா பார்த்திபன். அதற்குப் பிறகு இவரது சில திரைப்படங்கள் சரியாகப் போகவில்லை. வியாபாரத்தில் வெற்றி பெற மீண்டும் கையிலெடுத்தார் பிராமண ப்ராஜெக்டை. "சரி கம பத நீ" என்று இவர் எடுத்த படத்தில் மீண்டும் பிராமண குடும்பம் நாற‌டிக்கப்பட்டது. ஒரு திருமண வீட்டில் இவர் பிராமணப் பெண்ணிடம் சிலுமிஷம் செய்ய அதை அரசல் புரசலாக பார்க்கும் யாரோ ஒருவர் பின்னாளில் தெரியாத்தனமாய் அந்த வீட்டிற்கே பெண்பார்க்கப் போக, அந்த வீட்டில் நடக்கும் களேபரம் , அதனால் ஏற்ப்பட்ட அவமானம் போன்றவை அந்த பிராமணக் குடும்பம் கூண்டோடு தற்க்கொலை செய்து கொள்வது கதை. படத்தின் முக்கியத் திருப்பத்திற்க்கு பயன்படும் களமாக இதை உபயோகித்திருப்பார் பார்த்திபன் . படம் இவருக்கு பணத்தைத் தந்தது. பிராமணர்களுக்கு முகச்சுளிப்பைத் தந்தது. அதாவது இவர்களது ஃபார்மலாப்ப‌டி பிராமணர்களை கவுரவமான கதாபாத்திரத்தில் காட்டவேக் கூடாது. இப்படி மிகவும் அபத்தமாக காட்டினால் தான் அப்பாடா என்றிருக்கும். ஏன் என்று தெரியாது. பிராமணர்கள் என்றால் ஒரு அலர்ஜி, ஒரு வகை சாடிசம். அதன் வெளிப்பாடே இவ்வகையில் பிராமணர்களைச் சித்தரிக்க வைக்கிறது.

பகுத்தறிவு மாயை இவர்களுக்கு இந்தவகை சாடிச மனநோயை உண்டாக்கி ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் இப்படி ஒரு மனநோயுடன் காணப்படுகிறார்கள். சிலவகைக் காய்கறிகள் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. அது போல தான் இதுவும் . தகுந்த மனோவைத்தியரைப்பார்த்தால், நல்ல முறையில் கவுன்சிலிங் செய்தால் சரி செய்யலாம்.

தமிழகத்தில் யாரும் அவரவர் ஜாதிகளை , அடையாளங்களை விடுவதற்க்குத் தயாராக இல்லை. ஜாதி சுவர் எழுப்பியர்களில் பிராமணர்கள் கிடையாது. இந்த நூற்றாண்டில் கிராமங்களில் கோவில்களில் பிற ஜாதிக்காரர்களை நுழையக்கூடாது என்று பிராமணர்கள் சொல்லவில்லை. ஜாதிக்காக வெட்டிக் கொலை செய்வதில் பிராமணர்கள் இல்லை. கொடியங்குளம் ஜாதி மோதல் பிராமணர்களாலோ அல்லது பிராமணர்களுக்காகவோ நடக்கவில்லை. சமூகத்தில் யாரும் அவ‌ரவர் ஜாதிகளை விட்டுக் கொடுக்க தயாரில்லை. ஆனால் பிராமணர்கள் மட்டும் தங்கள் ஜாதியை விட்டு விட வேண்டும். தங்கள் கலாச்சார அடையாளங்களை விட்டுவிட வேண்டும் என்று தொடர்ந்து நிர்பந்திக்கப்படுகிறார்கள். அவர்களது பிராமண பாஷையும் ஏளனம் செய்யப்படுகிறது.

வித்தியாசமாக பேசப்படும் தமிழாக பிராமண பாஷை இருக்கிறது. ஆனாலும் அது தமிழ் தான் வேறில்லை. எப்படி கோயமுத்தூர் தமிழ், மதுரைத்தமிழ், சென்னைத்தமிழ் , நெல்லைத் தமிழ் என்று இருக்கிறதோ அது போல இதுவும் ஒரு வட்டாரத் தமிழ். ஒரு இனத்தால் பேசப்படுகிறது. அவ்வளவு தான். முஸ்லீம்களில் பெரும்பாலானவர்கள் வீட்டில் ஹிந்தி அல்லது உருது அல்லது அரபி இப்படித்தான் பேசுகிறார்கள். மசூதிகளில் வெளிநாட்டு பாஷையில் தான் ஓதுகிறார்கள். எந்த சினிமாக்காரனுக்கு இதை கேலி செய்ய ஆண்மை இருக்கிறது. கோவில்களில் தமிழில் தான் ஓதவேண்டும் என்று சொல்பவர்கள் மசூதிகளுக்கும் அந்தச்சட்டம் பொருந்தும் என்று ஏன் சொல்லவில்லை.

பிறரை அவமதிக்கவேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை. ஆனால் எப்படி அவர்களின் ஜாதிகளை, அடையாளங்களை கேலி செய்யத் தயங்குகிறீர்களோ, மனிதத்தன்மை பார்க்கிறீர்களோ (பயம் என்பதே உண்மை) அதுபோல பிராமணர்கள் விஷயத்திலும் பார்க்கலாமே.

தமிழ் சினிமாவில் இன்னும் எவ்வாறெல்லாம் பிராமணர்கள் கேலிக்குரியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதை தொடர்ந்து பார்ப்போம்...

தொடரும்......



தமிழ் சினிமாவில் பிராமணர்கள் - 4

Tuesday, May 5, 2009

தமிழர்கள் பிறந்த நாளை எந்த நாளில் கொண்டாட வேண்டும்?

தமிழ் ஆண்டுகள்:

உண்மையில் நாம் என்று பிறந்தோமோ அந்த நாளை பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்பது நியதி. அப்படிப் பார்க்கும் போது தமிழர்கள் அறுபது வருடத்திற்கு ஒருமுறை தான் பிறந்த நாள் கொண்டாட வேண்டும். நமது தமிழ் வருடங்கள் வான் கோள்களின் சுழற்சியின் அடிப்படையில் இயற்கையின் கணக்கீடுகளைக் குறிப்பதாகவே வடிவமைக்கப்பட்டிருகிறது. தமிழ் மாதங்களும் அவ்வாறே. அப்படிப் பார்க்கும் போது நாம் என்று பிறந்தோமோ அந்த வருடமும், எந்த நட்சத்திரத்தில் பிறந்தோமோ அந்த நாளில் தான் தமிழர்கள் உண்மையாகப் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.

அதாவது நாம் எந்த தமிழ் வருடத்தில் பிறந்தோமோ, அந்தத் தமிழ் வருடம், தமிழ் மாதம், தமிழ் நாள் எப்பொழுது மீண்டும் வருகிறதோ அன்று தான் நாம் முதல் பிறந்த நாளையே கொண்டாட வேண்டும். அது தானே சரி. அப்படிப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் அறுபது வருடங்களுக்கு ஒரு முறைதான் வருகிறது.

இப்படி நாம் பிறந்த அதே நாள் அதே வருடம் திரும்பி வருவதற்க்கு அறுபது வருடங்கள் ஆவதால் அந்த நாளை மிகச்சிறப்பாக அறுபதாம் கல்யாணமாக முழுகுடும்பத்துடன் கொண்டாடுகின்றோம். அதாவது அறுபது வயதில் ஒரு மனிதன் கண்டிப்பாக குடும்பத்துடன் தான் இருப்பான் என்பது இயற்க்கை என்பதால் அதை வெறும் பிறந்த நாளாக மட்டும் கொண்டாடாமல் குடும்ப நாளாகக் கொண்டாடுகின்றோம். மேலும் ஒரு மனிதன் வாழ்வின் ஒரு சுற்றை முடிப்பதற்க்குளே பல கஷ்டங்களை அனுபவித்து விடுகிறார்கள். சிலர் இல்லாமலே போகிறார்கள். இதனாலேயே இவைகளைத் தாண்டி இந்த முதல் பிறந்தநாள் அதாவது அறுபதாவது திருமணம் கொண்டாடுபவர்களை வணங்கி ஆசி பெறுகின்றனர். இப்படி இல்லாமல் ஆண்டுக்கொரு முறை பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் தமிழர்களா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதை எல்லோரும் மனதில் வைத்து தமிழ் வருடப்படி பிறந்தநாள் கொண்டாட வேண்டும். சரி இதையும் மூட நம்பிக்கை என்று பகுத்தறிவு மூடர்கள் சொன்னார்கள் என்றால் , தமிழ் புத்தாண்டு தேதியை மாற்றிய அவர்கள் தமிழ் வருட கணக்கீடுகளை மாற்ற ஏன் முன்வரவில்லை? தமிழ் வருடங்களின் பெயர்களை ஏன் மாற்றத் துணியவில்லை? முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். ஆதலால் அந்த மூடர்கள் படுத்தும் பாடுகளை மறந்து விட்டு நாம் உண்மையான தமிழர்களாக தமிழ்ப் புத்தாண்டை தமிழ் வருடப்படியே கொண்டாடுவோம். கீழே உங்கள் வசதிக்காக தமிழ் வருடங்கள்.

எண் தமிழ் வருடங்கள்

1 பிரபவ
2 விபவ
3 சுக்ல
4 பிரமோதூத
5 பிரசோற்பத்தி
6 ஆங்கீரச
7 ஸ்ரீமுக
8 பவ
9 யுவ
10 தாது
11 ஈஸ்வர
12 வெகுதானிய
13 பிரமாதி
14 விக்கிரம
15 விஷூ
16 சித்திரபானு
17 சுபானு
18 தாரண
19 பார்த்திப
20 விய
21 சர்வசித்து
22 சர்வதாரி
23 விரோதி
24 விக்ருதி
25 கர
26 நந்தன
27 விஜய
28 ஜய
29 மன்மத
30 துன்முகி
31 ஹேவிளம்பி
32 விளம்பி
33 விகாரி
34 சார்வரி
35 பிலவ
36 சுபகிருது
37 சோபகிருது
38 குரோதி
39 விசுவாசுவ
40 பரபாவ
41 பிலவங்க
42 கீலக
43 சௌமிய
44 சாதாரண
45 விரோதிகிருது
46 பரிதாபி
47 பிரமாதீச
48 ஆனந்த
49 ராட்சச
50 ந‌ள
51 பிங்கள
52 காளயுக்தி
53 சித்தார்த்தி
54 ரௌத்திரி
55 துன்மதி
56 துந்துபி
57 ருத்ரோத்காரி
58 ரக்தாட்சி
59 குரோதன
60 அட்சய

விதுர நீதி


பாண்டவர்களை அடைந்த‌ விதுரரை ஐவரும் அன்புடன் வரவேற்க்கின்றனர். ஓர் அழகான இருக்கையில் அவரை அமர்த்தித் தகுந்த முறையில் மரியாதை செய்தனர். யுதிஷ்டிரர் வினவிய பிறகு, விதுரர் த்ருதராஷ்ட்ரர் கூறிய வார்த்தைகளை அவரிடம் சொன்னார்: 

" திருதராஷ்ட்ரருக்கு நான் அங்கிருப்பது தேவையில்லை என்று தோன்றிவிட்டது. இதனால் நான் இங்கு வந்துவிட்டேன். அவருடைய மனம் மோத்தினாலும் பற்றுதலாலும் கலங்கித் தெளிவில்லாமல் இருக்கிறது. தர்மம் செய்வதற்கான வார்த்தைகளைக் கேட்பதற்க்குக் கூட அவர் விரும்பவில்லை. இப்போது கௌரவர்களுடைய அழிவு நெருங்கியிருக்கிறது என்றே தோன்றுகிறது. இந்த ஆபத்தைக் கண்டு அஞ்சி நடுங்க வேண்டியதில்லை. பகைவர் தரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு அனுகூலமான காலத்தை எதிர்பார்த்திருப்பவனுக்குப் பின்னால் சுகம் நிச்சயமாகக் கிடைக்கும்." என்று கூறினார்.  

விதுரர் மேலும் பாண்டவர்களுக்கு இவ்வாறு உபதேசிக்கிறார்:  

"செல்வச் செழிப்பில் இருக்கும் போதும் , சுகங்களை அனுபவிக்கும் போதும் தானே தன்னந்தனியாக அவற்றை அனுபவிக்காமல் பிறருக்கு உதவி செய்து எவன் அவற்றை சமமாகப் பங்கு கொடுக்கிறானோ, அவனுக்கு துக்கம் நேர்ந்த காலத்தில் துன்பச் சுமையை அவன் மட்டும் தனியாகச் சுமக்க வேண்டிவராது.  

அவனுடைய இன்னல்களைப் பகிர்ந்து கொள்பவர்கள் கிடைப்பார்கள். ஆதரவாளர்கள் கிடைப்பதற்கான மிகச் சிறந்த உபாயம் இதுதான். உதவிக்கு ஆட்கள் கிடைத்த பின் , வேண்டியனவெல்லாம் கிடைத்து விட்டன என்றே புரிந்து கொள்ள வேண்டும்.  

பணிவுள்ளவனாகத் தன்னை க்கிக் கொள்வதுதான் நன்மை பயக்கும். இதனாலேயே அவர்களுக்கு உயர்வு ஏற்படுகிறது." - விதுரர்

ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள்!


சச்சிதானந்தப் பரம்பொருள் என்னும் மரத்தில் எண்ணற்ற இராமர்களும் கிருஷ்ணர்களும் புத்தர்களும் வாழ்கிறார்கள். இவர்களுள் ஓரிருவரே அவ்வப்போது உலகில் வந்து பெரிய மாறுதல்களை ஏற்படுத்துகிறார்கள்.  

பெரிய நீராவிக்கப்பல் பல படகுகளையும் கட்டுமரங்களையும் எளிதாக இழுத்துச் செல்லும்; அதுபோல அவதார புருஷரும் ஆயிரக்கணக்கானவர்களை மாயை என்னும் பெருங்கடலிலிருந்து கரையேற்றித் தம்முடன் அழைத்துச் செல்கிறார்.  

லௌகீக எண்ணங்களும் சிந்தனைகளும் உன்னைக் குலைக்க அனுமதிக்காதே. வேண்டியவற்றைக் குறித்த நேரத்தில் செய், மனத்தை மட்டும் எப்போதும் இறைவனிடமே வைத்திரு.  

ஒருவன் தமக்கு எவ்வளவு பொருட்களைச் சமர்ப்பிக்கிறான் என்பதை இறைவன் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை; மாறாக அன்பையும் பக்தியையும் தருபவனிடமே இறைவன் தமது அருளைப் பொழிகிறார்.  

மரண வேளையில் ஒருவனின் மனத்தில் எழும் எண்ணங்களே அவனது மறுபிறவியை நிர்ணயிக்கின்றன. எனவே ஆன்மீக பயிற்சிகள் மிகவும் தேவை. தொடர்ந்த பயிற்சியின் மூலம் உலக எண்ணங்களை நம் உள்ளத்திலிருந்து மாதிரி இறைநினைவே எப்போதும் இருக்குமாறு செய்தால் மரண வேளையிலும் அது மாறாமல் இருக்கும்.  

இறைவனின் திருநாமங்களும் தெய்வீக வடிவங்களும் எண்ணற்றவை; எதன் மூலமாகவும் அவனை அடையலாம்.  

மரத்தின் அடியில் நின்று கைகளைத் தட்டினால் மரத்தில் வாழும் பறவைகள் எல்லாம் பறந்தோடி விடுகின்றன. அதுபோல இறைவனின் திருப்பெயரைச் சொல்லிக் கைகளைத் தட்டிப் பாடினால் தீய எண்ணங்களாகிய பறவைகள் பறந்தோடிவிடுகின்றன.  

இறைவனே எல்லோருக்கும் வழிகாட்டி அவனே உலகனைத்திற்கும் குரு. இறைவனின் திருநாமத்தைக் கேட்ட உடனே யாருக்கு மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் வழிகிறதோ அவனுக்கு அதுவே கடைசிப் பிறவி.  

இறைவனது திருநாமத்தில் நம்பிக்கை வைத்தல், உண்மையையும் உண்மையற்றவைகளையும் பிரித்தறியும் ஆற்றல் இவையே இறைவனை அடையும் வழிகள்.



சுவாமி விவேகானந்தரின் அறிய புகைப்படம்

Saturday, May 2, 2009

அக்பர் பீர்பால் கதைகள்



பீர்பாலின் நுண்ணறிவும், சமயோசித ஆற்றலும், அவருடைய தீராத பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் மதி நுட்பமும் ஏற்படுத்திய புகழ் நம் நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் பரவியது. பாரசீக மன்னர் பீர்பாலின் மதியூகம் பற்றிக் கேள்விப்பட்டார். 

வியத்தகு ஆற்றல் படைத்த மனிதரை நேரில் காண ஆர்வம் கொண்டார். பீர்பாலைத் தனது நாட்டிற்கு சிறப்பு விருந்தினராகச் சில நாட்கள் அனுப்பி வைகுமாறு அக்பர் மகா சக்கரவர்த்திக்குப் பாரசீக மன்னர் கடிதம் எழுதிக் கேட்டுக் கொண்டார். அதனை ஏற்றுக் கொண்ட அக்பர் பாரசீக மன்னருக்குச் சில பரிசுப் பொருட்களை பீர்பாலிடம் கொடுத்து அந்நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.  

அங்கு பீர்பாலுக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப் பட்டது. பீர்பாலின் மதியூகத்தைக் காண விரும்பினார் பாரசீக மன்னர்.  

மறுநாள் பீர்பால் அரசவைக்கு அழைத்து வரப்பட்டார். இது வரை பாரசீக மன்னனை பீர்பால் கண்டதில்லை. அங்கு ஐந்து ஆசனங்கல் போடப்பட்டிருந்தன. ஐந்திலும் ஒரே மாதிரியான முகத்தோற்றம் கொண்ட ஐந்து பேர் அமர்ந்திருந்தனர். அவர்களில் உண்மையான பாரசீக மன்னர் யார் என்பதை உடனடியாக பீர்பால் கண்டறிய முடியவில்லை. 

ஐந்து பேரையும் நன்றாக உற்றுப் பார்த்தார். அவர்களில் மையமாக அமர்ந்திருந்தவர் முன் சென்று தலை வணங்கி, "மாமன்னரே! உங்களைக் காண்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.  


இதனை கேட்டு வியந்த பாரசீக மன்னர் ஷா "பீர்பாலே, என்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டீர்?" என்று கேட்டார். "அரசே, தங்களைத் தவிர மற்ற நால்வரின் பார்வையும் உங்கள் மீதே இருந்தன. தாங்கள் மட்டுமே என்னைப் பார்த்தீர்கள். அதனைக் கொண்டுதான் தங்களைக் கண்டறிந்தேன்" என்றார் பீர்பால்.  


பாரசீக மன்னர் பீர்பாலின் அறிவாற்றலைக் கண்டு பேருவகை அடைந்து பரிசுகள் அளித்துப் பாராட்டினார்.

தமிழ் சினிமாவில் பிராமணர்கள் - பாகம் 2


எதிரி நாட்டுக்குள் புகுந்து போர் புரிந்து அந்த நாட்டையே அழித்தாலும் அந்நாட்டுப் பெண்கள் மீது வீரர்கள் விருப்பம் கொண்டு தூக்கி வந்து தனதாக்கிக் கொள்வர். அதுபோல தான் இப்பொழுது தமிழ் சமூகத்தின் அரசியல் வாதிகளும் சினிமாக்காரர்களும் செய்து வருகிறார்கள். இவர்கள் செய்வதெல்லாம் பிராமணர்களுக்கு எதிரான இனப்போர். கலாச்சாரப் போர். ஆனால் இதை எதிர்ப்போர் கிடையாது. இலங்கை இனப்போரிலாவது எதிர்ப்பதற்க்கு ஆள் இருக்கு. ஆனால் பிராமணர்களுக்கு வாதிடவும் ஆள் கிடையாது. அதனால் பலனும் கிடையாது. அதை எதிர்பார்க்கவும் முடியாது.

ஆனால் அரசியல் வாதிகளில், பிராமண எதிப்பு செய்யும் பல பெரியமனிதர்கள் வீட்டில் பிராமணப் பெண்கள் மனைவிமார்களாகவும், மருமகள்களாகவும் இருக்கிறார்கள். இத்தனை செல்வாக்கும் அதிகாரமும் படைத்த இந்த அரசியல் வாதிகள் எல்லோருமே முஸ்லீம் மக்களுக்காக உயிரையும் கொடுப்பேன் என்று சொல்பவர்கள். ஆனால் இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் முஸ்லீம் பெண்களைக் காதலிப்பதில்லை. ஒரு பாத்திமாவை ஒரு ஷகீதாவை இவர்கள் ஏன் மருமகள்களாக ஏற்றுக்கொள்ளவில்லை? இது பாரபட்சத்தை எடுத்துக் காட்டும் ஒரு கேள்விதான், யாரையும் புண்படுத்த அல்ல.

இப்படி பிராமணர்களை அவமானப்படுத்துவதிலும் பிராமணர்களுக்கே தொடர்ந்து புத்தி சொல்வதுமாக நடித்து அதில் மிகவும் ஆத்ம சாந்தி அடைந்து கொள்பவர்களில் முக்கியமானவர் சத்தியராஜ். இவரும் மணிவண்ணனும் சேர்ந்து விட்டால் போதும். இவர்கள் பிராமணர்களை பரிகாசம் செய்வதற்கு அளவே இல்லாமல் போய்விடும்.

சினிமாக்காரர்களும் பிராமணர்களுக்கு எதிரான இந்த வகை கலாச்சார அழிப்பை விரும்பிச் செய்கிறார்கள். சத்தியராஜ் முடிந்தவரை பிராமணர்களை பரிகாசம் செய்வார். தான் பணம் சம்பாதிக்க வில்லாதி வில்லன் படத்தில் ஒரு பிராமண வக்கீலகவே நடித்தார். இவருக்கு ஒரு பெண்ணும் இருப்பாள். வழக்கம் போல அந்த பிராமணரின் பெண்ணாக வரும் நக்மா வேறு ஜாதிக்காரரான இன்னொரு சத்தியராஜின் மீது காதல் கொள்வார். அப்படித்தானே நடந்தாகவேண்டும். இல்லையென்றால் படம் ஓடாதே. பிராமணப்பெண் வேறு ஜாதிக்காரனைதான் திருமணம் செய்யவேண்டும். இது சினிமாவில் எழுதப்படாத சட்டம். போதாக்குறைகு பம்பாய் மாமி என்று குத்தாட்டமும் போட்டார்.

சத்தியராஜ் நடித்த புதுமனிதன் படத்தில் கடலோரத்தில் மீனவ குப்பத்தில் இவரும் கவுண்டமணியும் கும்மாளம் போடுவார்கள். இதில் ஆச்சி ஒரு பிராமண மாமியாகவும் இவர்களது குப்பத்தில் இவர்களுக்கு சோறு போட்டு கூடவே இருக்கும் கதாபாத்திரம். குடித்து கூத்தடிப்பவர்களுடன் மடிசார் மாமி கதாபாத்திரம் கொஞ்சமும் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டு இவர்களது சமத்துவமும் பேசப்பட்டது. நாறிப்போனது மடிசார் தானே! இவர்களுக்கு என்ன கவலை. இவர்கள் புரட்சிக்காரர்கள் என்று பேர் வாங்கவேண்டுமே.


கண்ணாமூச்சி ஏனடா என்ற நகைச்சுவைச் சித்திரம். ஜாதியே இல்லமல் கூட அந்தப் படத்தில் நகைச்சுவை காண்பிக்கப் பட்டிருக்கலாம். ஆனால் ஏதாவது ஒரு விதத்தில் பிராமண பாஷையும் அப்படி கதாபாத்திரமும் வந்தே ஆகவேண்டும் என்று விதி இருக்கிறது. ஏனெனில் இவர்களுக்கு பிராமணர் என்றால் தானே சிரிப்பு வருகிறது. இந்தப்படத்தில் வித்தியாசமாக பெண்ணுக்கு பதிலாக பிராமண பையனுக்கு கலப்பு திருமணம் செய்து வைத்தார்கள். சினிமாக்காரர்கள் நல்ல படம் எடுக்கிறார்களோ இல்லையோ, பிராமணர்களுக்கு நன்றாகவே கலப்புத் திருமணம் செய்துவைக்கும் புரோகிதர்களாக இருக்கிறார்கள்.


கமலஹாசன் . அற்புதமான நடிகர். உலகம் போற்றும் மிகச்சிறந்த கலைஞர். இவர் அடிப்படையில் பிராமணர். ஆனால் தன்னை பூனூல் போட்டு பிராமணர் ஆக்கிவிடுவார்களோ என்று பயத்தில் பூனூல் வேண்டாம் என்று சொல்லி பிராமணராகாமல் விலகியவர். ஆனால் அடையாளங்களிலிருந்து இவர் விலகினாரே தவிர மனதளவில் இவர் பிராமண நிலையிலிருந்து வெளிவரவில்லை என்பது இவர் தனது படங்களில் பிராமணராக நடிப்பதில் காட்டும் அதீத விருப்பத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

அரங்கேற்றம் படத்தில் இவரும் தானே இருந்தார். அந்த தொற்று இல்லாமலா போகும். ஆனால் அதற்கு பிறகு மீண்டும் கோகிலா கடந்து மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, பம்மல் கெ சம்மந்தம், பஞ்சதந்திரம், தசாவதாரம் வரை இவர் பிராமணராக நடிப்பதற்க்கும் , பிராமண கதாபாத்தை கதையில் உபயோகிப்பதற்கும் வஞ்சனை காட்டியதே இல்லை.

இவர் தயாரித்த நள தமயந்தி திரைப்படத்திலும் பிராமண பாத்திரமே முக்கிய சமையல் பாத்திரம். மகளிர் மட்டும் என்ற நகைச்சுவைப் படத்தில் ஊர்வசி வேடத்தில் பிராமண பாஷை படம் முழுக்க எல்லோரையும் சிரிக்க வைத்தது.

அவ்வை சண்முகி , பம்மல் கெ சம்மந்தம், தசாவதாரம் ஆகிய படத்தில் எல்லா கதாநாயகிகளும் பிராமண கதாபாத்திரமே. அவர்கள் சினிமா விதிப்படி பிராமணர் இல்லாத இந்த ஹீரோவைத்தான் கல்யாணமும் செய்வர். சரி அப்படி ஏன் பிராமண கதாபாத்திரத்தையே இவர்கள் துரத்த வேண்டும். ஜாதிகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாதா? அப்படி எடுத்தாலும் பிராமண ஜாதிதான் எல்லோராலும் காண்பிக்கப் பட வேண்டுமா. ஏனென்றால் அவர்களுக்கு தானே அடையாளம் இருக்கிறது. ஒரு மடிசார், ஒரு நாமம், ஒரு பாஷை. இதே அடையாளம் இன்னும் பல ஜாதியினருக்கு இருக்கிறதே! வேறு மத பெண்களுக்கு இருக்கிறதே! அட அவர்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் பிராமணர்கள் என்றால் எதிர்க்க ஆளில்லை. அப்படியே எதிர்த்தால் தமிழ்நாட்டில் பப்பு வேகாது. நாதியத்த பசங்க‌. அதுனால யாரு வேண்டுமானாலும் பிராமணர்களின் அடையாளங்களை திரையில் உபயோகப்படுத்தி வேண்டுமட்டும் கேலி செய்யலாம்.

கமல்ஹாசனைப் பொருத்தவரை அவர் அதிகம் அவமதிப்பதில்லை. ஆனால் பிராமணர்களை படத்தில் உபயோகித்து, கலப்பு திருமண சடங்கும் செய்து வைத்து பிராமண கலாச்சார அழிப்பு கூட்டத்தில் நானும் ஒருவன் என்பதை வெளிப்படுத்த தவறியதில்லை. இத்தனை பிராமண கதாபத்திரத்தில் நடித்த இவர் கொஞ்ச நாளாவது பிராமணராக வாழ்ந்து பார்த்தால் சினிமாவில் தங்களை எப்படியெல்லாம் கேலிப்பொருளாக பயன்படுத்துகிறார்கள் என்பது இவருக்குப் புரியலாம். புரிந்து கொள்ள வேண்டுமென்று நினைத்தால்.

தமிழ் சினிமாவில் இன்னும் எவ்வாறெல்லாம் பிராமணர்கள் கேலிக்குரியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதை தொடர்ந்து பார்ப்போம்...

தொடரும்.......

தமிழ் சினிமாவில் ப்ராமணர்கள் - 3

அக்பர் பீர்பால் கதைகள்:


அக்பர் பீர்பால் கதைகள்:  

சக்கரவர்த்தி அக்பரின் அரண்மனையில் ஒரு பெரிய விருந்து நடைபெற்றது. ஏராளமான முக்கிய பிரமுகர்கள் அதில் கலந்து கொண்டனர்.  

அக்பரும் பீர்பாலும் அருகருகே அமர்ந்து விருந்துண்டனர். விருந்தில் விதவிதமான பண்டங்கள் பரிமாற‌பட்டன. இருவரும் சுவாரஸியமாக உரையாடிக்கொண்டே உண்டனர். 

இலையில் வைக்கப்பட்டிருந்த பலாப்பழ‌ங்களைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

பலாக்கொட்டைகளை அக்பர் வேடிக்கையாக பீர்பாலின் இலையில் அவருக்குத் தெரியாமல் வைத்துவிட்டார்.  

சாப்பிட்டு முடியும் நேரத்தில் அக்பர் பீர்பாலின் இலையைப் பார்த்துவிட்டு, "பீர்பால், எவ்வளவுதான் உமக்கு பலாப்பழத்தின் மேல் ஆசை இருந்தாலும் இவ்வளவு பழங்களா உண்பது?" என்று கேலியாகக் கூறிச் சிரித்தார்.  

குனிந்து இலையைப் பார்த்த பீர்பால் தான் தின்ற பழங்களின் கொட்டைகளையெல்லாம் மன்னர் தன்னுடைய இலையில் வைத்துவிட்டதைக் கண்டு கொண்டார். 

"அரசர் பெருமானே! நானாவது பழங்களைத் தின்று விட்டுக் கொட்டையை இலையில் வைத்துவிட்டேன். நீங்கள் பலாக்கொட்டையையும் சேர்த்து அல்லவா தின்று வெட்டீர்கள். உங்கள் இலையில் கொட்டையே இல்லையே!" என்று கூறிச் சிரித்தார்.  

பீர்பாலுடைய சமயோசிதக் கிண்டலைக் கேட்டு மன்னர் பெருவகை அடைந்தார்.

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்:


சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்:

அன்பிற்குறிய சகோதர சகோதரிகளே!  

கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள். திட்டம் எதுவும் தேவையில்லை. இதற்க்கு திட்டமிடுதலால் ஆகப்போவதும் ஏதுமில்லை.  

ஒரு மனிதனை வீறு கொண்டு எழுந்து வேலை செய்ய வைப்பது எது? பலம். பலமே புண்ணியம், பலவீனம் பாவம். 

வெடி குண்டின் ஆற்றலுடன் உபநிஷத்துகளிலிருந்து வெளிவருகின்ற ஒரு வார்த்தை இருக்குமானால் அது அச்சமின்மை என்பதேயாகும். அச்சமில்லாதவன் இந்த உலகத்தை வெல்வான்.  

இறைவன் ஒளிர்வதாலேயே அனைத்தும் ஒளிர்கின்றன. எங்கெல்லாம் எதுவெல்லாம் அறிவுமயமாக ஒளிர்கிறதோ சூரியனில் வீசுகின்ற ஒளியாகட்டும் அல்லது நம் அறிவில் ஒளிர்கின்ற சைதன்யமாகட்டும் அது இறைவனேயன்றி வேறில்லை.  

தாமரை இலை போல மனிதன் இந்த உலகில் வாழ வேண்டும். அது நீரிலேயே இருந்தாலும் நீரால் நனைக்கப்படுவதில்லை. மனிதனும் அவ்வாறே இந்த உலகில் பற்று எதுவும் இல்லாமல், உடல் உலகிலும் உள்ளம் இறைவனிடதிலுமாக வாழவேண்டும். ஏனெனில் இறையடி சேர்தலே நிரந்தரம்.
 
பெரிதும் , சிறிதும் எல்லாமே கடவுள் தான்; வேறுபாடெல்லாம் ஆற்றலின் வெளிப்பாட்டில் தான்.  உருவத்தில் இல்லை.