Sunday, June 14, 2009

வள்ளுவர் வாக்கு


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண்விடல்

விளக்கம்: இந்தச் செயலை, இன்ன காரணத்தால் இவன் செய்து முடிப்பான் என்று கண்டுகொண்டு அந்தச் செயலை முடிக்கும் பொறுப்பை அவனிடமே விடவேண்டும்.

இது மேனேஜ்மென்ட் தியரி. எம் பி ஏ படிப்பில் ஹியூமென் ரிசோர்ஸ் பாடத்தில் தொழிளாலர்களிடம் உற்சாகம் குறையாமல் வேலை வாங்குவது எப்படி என்ற பகுதியில் ஒரு தொழிளாலர்க்கு எந்த மாதிரியான வேலை கொடுக்கப்பட்டால் அவர் உற்ச்சாகமுடன் அதைச் செய்கிறார் என்று கவனிக்க வேண்டும். அந்த வேலையையே அவருக்கு தொடர்ந்து கொடுத்து அதில் ஊக்கமளித்தால் நிறுவனப் பணிகள் சிறப்புடன் நடக்க அது சரியான மேளாலரின் முடிவாக இருக்கும். இவ்வாறு எம் பி ஏ படிப்பவர்களுக்கு சொல்லிக்கொடுப்பார்கள். ஆனால் அதற்க்கு அவர்கள் லட்சக் கணக்கில் செலவு செய்து இரண்டு வருடங்கள் படிக்க வேண்டும்.

இதையே திருவள்ளுவர் இரண்டடியில் ஏழு வார்த்தையில் நறுக்கென்று விளக்கி விட்டார். இதைப் படித்தால் வேலை கொடுக்க மாட்டார்கள். என்ன கொடுமைடா சாமி? உலகம் முழுவதும் தமிழையும் வள்ளுவரையும் பரப்ப வேண்டும். பாதிரியார்கள் மதம் மாற்றுவது போல உலக மக்களையெல்லாம் தமிழால் தமிழராய் மாற்ற வேண்டும். இருக்கும் வேத புத்தகங்களையெல்லாம் தூக்கியெறிந்து மக்கள் திருக்குறள் தான் தமது வேதம், திருவள்ளுவர் தான் ஒரே தெய்வம் என்று ஒட்டு மொத்த உலக மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். அந்த நாள் விரைவில் வரும் என்று எதிர்பார்ப்போம்.

பின்குறிப்பு: நான் என் குஜராத்தி நண்பனுக்கு திருக்குறள் சொல்லிக்கொடுக்க துவங்கி விட்டேன். வாய்பிளந்து இவவளவு விஷயம் அதில் இருக்கா என்று அவர் அதிசயித்துப் போவதை ரசித்து மகிழ்கிறேன். முடிந்தால் நீங்களும் ஒரு வேற்று மொழிக்காரருக்கு திருக்குறள் சொல்லித்தாருங்கள்.

வாழ்க தமிழ், வளர்க தமிழ்.