Friday, December 18, 2009

எண்ணங்களும் வாழ்வும்!


எண்ணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன். மகான். ஞானி.

தவறான எண்ணங்களை கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும். அதற்கு வழி எப்போதும்
நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனத்தில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

எண்ணம் என்பது எப்படி இயங்குகிறது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எவ்வாறு தோன்றுகின்றன என அடிக்கடி ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் நீங்களும் அறிஞர்களாகத் திகழலாம்.

எண்ணத்தின் வேகமும், இயல்பும், அறிந்தோர்க்கு எண்ணமே இன்பமயம். எண்ணம் அமைதி பெறும்.

எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி. எண்ணி எண்ணிட இனிதே பயக்கும்.

எண்ணத்தின் சக்தி இயல்பு அறிந்திடில் எண்ணம் பிறக்கும் இடமும் விளங்கும்.

எண்ணு, சொல், செய் எல்லார்க்கும் நன்மை தரும் வகையில், எண்ணும்படி செய் , செய்யும்படி எண்ணு. அதுவே உங்களுக்கும் மற்றவர்க்கும் நன்மை பயக்கும்.

உண்மையில் எதிரி உங்களுக்கு உண்டு எனில் அது உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே ஆகும்.

உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும், எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்.

ஒரு முறை ஒரு தீய எண்ணத்தை மனதில் எண்ணி விட்டால் போதும் மறுமடியும் அத்தகைய எண்ணம் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று. எனவே எண்ணங்களை நல்லவைகளாகவே எண்ணப்பழகுங்கள். அதுவே உங்கள் வாழ்வை செம்மைப்படுத்தும்.

- சுவாமி வேதாந்திரி மகரிஷி

No comments: