Saturday, July 25, 2009

ஓரினச்சேர்க்கையும் இத்தாலி ராணியும்


டும் டும் டும் டும் டும்

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி! சல்லாப மனிதர்களுக்கோர் அறிய வாய்ப்பு! இத்தாலி ராணியின் அதிரடி உத்தரவு!

நமது நாட்டில் இனி ஆணும் ஆணும் காதலிக்கலாம். பெண்ணும் பெண்ணும் காமம் கொள்ளலாம்.

நாட்டில் எல்லோரும் ஓரினச்சேர்க்கை வைத்துக்கொள்ளலாம் என்று இத்தாலி ரானியால் இனிதே ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம்.

டும் டும் டும் டும் டும்

மன்னின் மைந்தன்: "இது என்ன அநியாயம்? இது அக்கிரமம். புனிதமான உணர்வுகளையெல்லாம் வக்கிரமான சட்டமியற்றி கொச்சையான உறவுகளாக மாற்ற நினைப்பதா? இது என்ன இத்தாலி என்று நினைத்துக் கொண்டாளா உன் ராணி. இதை தம்பட்டம் அடித்து சொல்ல உனக்கே கூச்சமாக இல்லை? அருவெறுப்பாக இல்லை? நீயும் இந்த மன்னின் மைந்தன் தானே மடையனே!"

காவலாளி: ஏய்! நீ என்ன புரட்சிக்காரனா! ராணிக்குத் தெரிந்தால் உன் தலை சீவப்படும்! உடனே இங்கிருந்து போய்விடு.

மன்னின் மைந்தன்: ஐந்தாயிரம் வருடங்களுக்கும் பழமையான செம்மைப்படுத்தப்பட்ட புனிதமான எங்கள் கலாச்சாரத்தை அழிப்பதே தனது வேலை என எண்ணி சட்டம் இயற்றுகிறாள் உன் ராணி. இதைக்கண்டும் வாய்மூடி அடிமையாக இருக்கச் சொல்கிறாயா! வெள்ளைத் தோல் மாயை கொண்டவனே! வெள்ளைக்காரன் சொல்வது தான் நாகரீகம் என்று எண்ணுபவனே! உன் ராணியிடம் போய்ச் சொல், இந்நாட்டில் இது போன்ற இழிசட்டங்கள் இயற்றத் தேவையில்லையென்று.

காவலாளி: சல்லாபமாயிருப்பவர்களுக்கு துணைபோகும் சட்டம். உனக்கு ஏன் வலிக்கிறது?

மன்னின் மைந்தன்: ஏன்? நீ சட்டம் இயற்றாவிட்டால் அவர்கள் சல்லாபிக்கப்போவதே இல்லையா? இல்லை இது போன்ற இழி மனிதர்களை இங்கே யார் தடுத்தார்கள்? இவர்கள் இருட்டரைக்குள் எட்டிப்பார்த்தவர்கள் யார்? அல்லது இது வரை இவர்களை ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று சொல்லி என்றாவது கைது செய்திருக்கிறீர்களா? மக்கள் தங்கள் தர்மத்திற்க்கு கட்டுப்பட்டுத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஓரினச்சேர்க்கையாளர்களை யாரும் சீண்டாத பொழுது தேவையில்லாமல் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து நல்ல கலாச்சாரத்தில் வாழ்பவர்களை முறையற்ற வாழ்வுக்குத் தூண்டுகிறீர்கள். இந்த பாரதத்தின் கலாச்சார ஆணிவேரை அசைத்துப்பார்க்கத் துணிகிறீர்கள். ஒரு நாள் இந்த கேவலமான போக்கிற்க்கு நீயும் உன் ராணியும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

காவலாளி: மூடனே! அதிகப்பிரசங்கி. அரசியின் சட்டத்தை அவமதிக்கிறாயா! உன்னை ராணியின் முன் நிறுத்துகிறேன் பார்.

மன்னின் மைந்தனை இழுத்துச் சென்று இத்தாலி ராணியின் முன் நிறுத்தினான் காவலாளி.

இத்தாலி ராணி: என்ன பிரச்சனை?

காவலாளி: மகாராணி! இவன் மன்னின் மைந்தன். ஓரினச்சேர்க்கை செய்யுங்கள் என்று நீங்கள் இயற்றிய உயர்வான சட்டத்தை அவமதித்துப் பேசுகிறான்.

இத்தாலி ராணி: மன்னின் மைந்தா! உனக்கு ஓரினச்சேர்க்கை பிடிக்காதா? அல்லது உனக்கு ஒத்துப்போக சரியான ஆண் கிடைக்கவில்லை என்ற கோபமா?

மன்னின் மைந்தன்: தூ... வெட்கம் கெட்டவளே! கூச்சமில்லாதவளே! நாயைப்போல் வாழும் உங்கள் வாழ்க்கையைப் பேயைப்போல் வந்து எந்நாட்டில் திணிக்கப்பார்க்கிறாயே! இந்து தர்மமும் இந்நாட்டின் கலாச்சாரமும் உன்னையும் சேர்த்து வாழவைக்கும். நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்ட நினைக்காதே!

இத்தாலி ராணி: என்னடா பெரிய இந்து தர்மமும் உனது கலாச்சாரமும்! நீங்கள் எல்லோரும் காட்டுமிராண்டிகள் என்று உங்கள் ஊர்காரர் ராமசாமி நாயக்கரே சொல்லிவிட்டார். கருணாநிதியும் அதையே தான் வழிமொழிகிறார். உங்கள் சொந்தநாட்டுக்காரர்களே எங்கள் பக்கம் தான்! இத்தாலி நாட்டுச் சட்டத்தை நீ ஏற்றுக்கொள்ள வேண்டியது உனது தலைவிதி.

மன்னின் மைந்தன்: இழி பிறவிகள் இந்து தர்மத்தை எப்படி வேண்டுமானாலும் பழிப்பார்கள். அதை ஏற்றுக்கொள்ளும் அவசியம் எனக்கு இல்லை. இந்த நாட்டின் தர்மங்களும் மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்ற உயர்ந்த சிந்தனைகளுடைய கலாச்சாரமும் உன்னால் நசுக்கப்படுவதை நான் அனுமதிக்கமாட்டேன்!.

இத்தாலி ராணி: ஏய்! நீ அதிகம் பேசுவாய் போலிருக்கிறது. இதோ பார். மிருகங்களுக்குக் கூட ஓரினச்சேர்க்கை உண்டு என்றும் இது ஒரு இயற்க்கையான உணர்ச்சி என்றும் நிபுனர்களே சொல்லியிருக்கிறார்கள். எதுவும் தெரியாமல் எக்காளமிடாதே?

மன்னின் மைந்தன்: மமதை கொண்ட ராணியே! புனர்ச்சியின் உணர்ச்சிகள் இயற்க்கையானதே என்று உணர்ந்து, அத்தகைய உணர்ச்சிகள் உண்டாவதற்க்கான காரணமும் அறிந்து அவற்றை முறைப்படுத்தி முழுமையான மனிதனாக ஒருவன் வாழ என்ன செய்யவேண்டும் என்பதனை வகுத்து முறையாக அதன் படி வாழ்பவர்கள் நாங்கள். நீ எனக்குச் சொல்லித்தராதே!

இத்தாலி ராணி: ஹும்! நீ சாகாமல் போக மாட்டாய்! இதோ.. உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன்...எங்கே ஓரினச்சேர்க்கையை நீங்கள் கலாச்சாரம் கொண்டு எப்படிக் கட்டுப்படுத்தினீர்கள் என்று நான் திருப்தியடையும் வகையில் சொல் பார்க்கலாம். என் மனம் அதை ஏற்றுக் கொண்டால் உன்னை விடுவிக்கிறேன். இல்லையேல் உன் தலை கொய்யப்படும் ஜாக்கிரதை.

மன்னின் மைந்தன்: முதலில் அது உண்டாகும் காரணத்தை புரிந்து கொள். எல்லா மனிதர்களுக்கும் பதின் வயதுகளின் ஆரம்பத்தில் தோன்றும் ஒரு பரவச உணர்ச்சி தான் ஓரினக் கவர்ச்சி. அது உடலுறவுக்கு ஏங்கும் உணர்ச்சி அல்ல.

அது உடல் மாற்றத்தைக் கண்டு பரவசம் கொண்டு தம்மைப்போல் உள்ள சக மனிதனுக்கும் அதுவே தானா என்று ஆராய முற்படும் முயற்ச்சி. ஆணுக்கு ஆண் முழுமையாக தங்களை அறிந்து கொள்ளவும், அதே போல் பெண்ணுக்குப் பெண்ணும் தங்களை முழுமையாக புரிந்து கொள்ளும் ஒரு ஆர்வக் கோளாரின் வெளிப்பாடு.

பின்னர் நான் மட்டும் தனித்தவன் அல்ல. எல்லோரும் என்னைப்போல் தான் என்று உணர்ச்சிகள் ஒரு நிலைக்குத் திரும்பும் போது மனிதனின் வயது பதின் வயது துவக்கத்திலிருந்து பதினைந்தைத் தொட்டிருக்கும். பதினைந்து வயதைத் தொடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இப்போது தங்களைப்பற்றித் தெரிந்து கொண்டதைப்போல் எதிர் பாலரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலெழும். இது தான் இயற்க்கை.

இந்த உணர்ச்சி தான் ஆணையும் பெண்ணையும் இயற்க்கையான புனர்ச்சிக்குக் கொண்டு செல்லும். காதலும் காமமும் இந்த வயதில் தான் தலை தூக்கும். ஆணுக்குப் பெண்ணையும் பெண்ணுக்கு ஆணையும் அடையத்துடிக்கும் வயது. இந்த வயதில் காதலும் காமமும் முறையான உறவான திருமணம் என்ற சடங்கின் மூலமாக நிகழ்த்தப் பட்டு இல்லற வாழ்க்கை என்னும் தர்மத்திற்க்குள் நுழைந்து இயற்க்கையாக உண்டாகும் முறையான உணர்ச்சிகளை முழுமையாக அனுபவிக்கும் படி எங்கள் கலாச்சாரம் கட்டுக்கோப்பாக இயற்றப்பட்டுள்ளது.

இத்தாலி ராணி: சரி அப்படியானால் ஓரினச்சேர்க்கை உருவாவது ஏன்?

மன்னின் மைந்தன்: ஒரு ஆண் தன்னை முழுமையான ஆண் என்பதை உணரத் தவறும் போது. ஒரு பெண் தன்னை முழுமையான பெண் என்பதை உணரத் தவறும் போது, அவர்களின் உணர்வு ஒரே பாலினரிடமிருந்து மாறி எதிர் பாலினரை ஏற்க்கத் தடுமாறும். அவ்வாறு தடுமாறும் சமயங்களில் ஒருவருடைய மனம் சக பாலினரிடமே தம்முடைய உணர்வுக்கு ஆதரவை எதிர் பார்க்கும். அப்படிப்பட்ட இணக்கமான ஒரு ஆதரவு சக பாலினரிடம் இருந்தே கிடைக்கும் பொழுது அதையே இன்பமாகக் கொண்டு விடுகின்றனர்.

அதிலிருந்து விடுபட மனம் மறுக்கிறது. இது தான் உலகம், இதுவே இன்பம் என்று மனம் முடிவு செய்துவிடுகிறது. ஆணுக்கு பெண்ணின் அவசியமும், பெண்ணுக்கு ஆணின் அவசியமும் தேவையில்லை என்ற எண்ணம் தலைதூக்கி விடுகிறது.

இது இயற்கையான இல்லற வாழ்விலிருந்து அவர்களை வெளியேற்றி விடுகிறது. இவ்வாறான வாழ்க்கை சமூகத்திற்கு ஒவ்வாது. குடும்ப வாழ்க்கைக்கு கேடு விளைவிக்கும். குடும்பம் குடும்பமாக வாழும் சமூகத்தின் நடுவே இப்படிப்பட்டவர்கள் வாழ்வது அந்த சமூகத்தின் மற்ற தரப்பினரின் வாழ்க்கையை பாதிக்கக் கூடியதாக அமையும்.

அதனாலேயே அவ்வாறானவர்களை சமூகத்திற்க்கு அப்பாற்ப்பட்டவர்கள் என்று ஒதுக்க நேர்கிறது. அனால் இத்தாலி ராணியே! ஒட்டு மொத்தச் சமூகமும் ஓரினச்சேர்க்கையாளர்களாகவே ஆக வேண்டும் என்று நீ விரும்புகிறாய். இது சரிதானா? நீயே யோசித்துப்பார்!






இத்தாலி ராணி: சரி, இத்தகைய உணர்ச்சிகளை உங்கள் கலாச்சாரம் மூலமாக எப்படித் தடுக்கிறீர்கள்?

மன்னின் மைந்தன்: சுலபம். ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ தங்களுடைய பாலுணர்வை முழுமையாகப் புரிந்து கொள்ளச் செய்தால் போதும்.

உதாரணமாக பதின் வயதைத் தொடும் போது பெண் பூப்பெய்துகிறாள். எங்கள் கலாச்சாரப்படி பூப்பெய்தும் பெண்ணை உடனே மற்ற பெண்கள் எல்லோரும் சேர்ந்து அலங்காரம் செய்து அவளைச் சுற்றி நின்று பாட்டு பாடி அவளுடைய அழகை வார்த்தைகளால் சொல்லி , அவளுடைய பெண்மையை உணரச் செய்கிறார்கள்.

மனோரீதியாக அந்தப் பெண் தன்னுடைய பெண்மையை யாருடன் ரசிக்க வேண்டியவள் என்பதை பாட்டால் உணரச் செய்கிறார்கள். 'கட்டழகன் வருவான்', 'காளை உன்னைக் கட்டுவான்','வீரன் உன்னைக் கவர்ந்து செல்வான்' என்றெல்லாம் அவளது பாலுணர்வை ஆண்மீது செலுத்தச் செய்கிறார்கள். இதனாலேயே பருவம் எட்டும் வயதில் ஒரு பெண் தன் பெண்மையை முழுதாக உணர்கிறாள் மேலும் அவள் தன்னுடன் கூட வேண்டியது ஒரு ஆண் தான் என்று முழுமையாக மனதை எதிர் பாலரிடம் செலுத்த தயார் செய்து கொள்கிறாள். மாறாக அவள் பெண்ணைக் காதலிக்க விரும்பமாட்டாள்.

அதே போல் ஒரு ஆண் அரும்பு மீசை முளைத்தவனாக ஆகும் போது அவனிடம் ஆண் என்ற உடற்திமிரை ஏற்றி வைப்பார்கள். வீர விளையாட்டுக்கள், மல்யுத்தம், காளை அடக்குதல் போன்றவை எல்லாம் இப்படி வந்தவை தான். 'ஆம்பளப்புள்ள, நெஞ்ச நிம்த்தி நடப்பா!' என்று உசுப்பேற்றுகிறார்களே! அது ஆணாதிக்கம் உருவாகவும் பெண்ணை அடிமையாக்கவும் இல்லை. அப்படியெல்லாம் இருந்தால் தான் ஒரு ஆண் மனோரீதியாக தன்னை ஆண் என்று முழுமையாக உணரும் சூழல் உண்டாகிறது. (இந்த காலத்தில் ஆண் என்ற திமிர் ரவுடித்தனமும் அடியாள் வேலைக்கும் என்று ஆகிவிட்டது வேறு விஷயம்).

இப்படி ஒவ்வொரு ஆணும் முழுமையான ஆண்மகனாக நெஞ்சு நிமிர்த்தி நடப்பவனாக இருந்தால் அவன் சக ஆண்மகனிடம் தனது உணர்வுக்கு வடிகால் தேட மாட்டான். அவனது உணர்வு பெண்ணைக் கவர வேண்டும் என்பதிலேயே இருக்கும். ஆணும் ஆணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது காந்தத்தின் ஒரே துருவங்கள் ஒன்றை ஒன்று எதிர்க்கும் என்ற தத்துவப்படி இருவரும் விலகிச் சென்று விடுவார்கள். காதல் கொள்ள மாட்டார்கள்.

பெயர் வைப்பதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் காட்டுவதும் ஒருவரை பெயர் சொல்லி அழைக்கும் போதே அவருடைய பாலின உணர்வு ஒவ்வொரு முறையும் உணரப்படுவதற்க்கே.

அதுமட்டுமல்ல ஆடைகளிலும் ஆண் பெண் என்று வேற்றுமை காட்டுவதும் நாம் எதிர் பாலரைப் பார்க்கிறோம் என்ற உணர்வு ஆணுக்கும்

பெண்ணுக்கும் உண்டாக வேண்டும் என்பதற்க்கே. உங்கள் நாட்டிற்கு வரும் எல்லோரும் சொல்லும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? அங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை என்பதே.

இத்தாலி ராணி: இது என்ன வேடிக்கை ஆணுக்கும் பெண்ணுக்கும் சீருடை இருக்குமா என்ன?

மன்னின் மைந்தன்: ஏன் இருக்கக் கூடாது? உமது காவல் துறைக்கு ஏன் சீருடை? கயவர்கள் கண்டால் கழிந்து ஓட வேண்டும் என்பதற்க்குத் தானே! பள்ளிக் குழந்தைகளுக்கு ஏன் சீருடை? பார்ப்பவர்களுக்கு பரிவு உண்டாக வேண்டும் என்று தானே! ஏன் உமது அமைச்சர்கள் எல்லாம் ஏன் வெள்ளையும் சொல்லையுமாக அலைகிறார்கள்? அவர்களை பார்த்தவுடன் பொதுமக்கள் பயப்பட வேண்டும் அதற்குத் தானே!

இதில் எல்லாம் எந்தக் காரணத்திற்க்காக சீருடை உள்ளதோ அதே போல் தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உளவியல் ரீதியாக புரிந்துணர்வு உண்டாக உடையில் வித்தியாசம் காண்பிக்கப்பட்டது.

இப்படி பல முறைகளில் எங்கள் கலாச்சாரத்தில் ஒரு ஆணை முழுமையான ஆணாகவும் ஒரு பெண்ணை முழுமையான பெண்ணாகவும் உணரச் செய்து அவர்களை முறையான இல்லற வாழ்க்கை வாழச் செய்கிறோம்.

ஆனால் நீயோ தேவையில்லாமல் சட்டமியற்றி எங்கள் கலாச்சாரத்தை அடியோடு உடைக்கப் பார்க்கிறாய்!







இத்தாலி ராணி: ம்ம்ம்! நீ சொல்வதை கேட்கும் போது எனக்கு சரியென்று தான் படுகிறது. ஆனால் இந்த நாட்டை இத்தாலி சாம்ராஜ்ஜியமாக 
மாற்ற வேண்டும் என்று எனக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் என்னால் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. 

அப்போது ஒரு காவலாளி ஓலை ஒன்றைக் கொடுக்கிறான். இத்தாலி ராணி சத்தமாகப் படிக்கிறாள். "பாரதத்தை ஆளும் இத்தாலி ராணியே! நீ இயற்றிய புதிய சட்டம் பற்றி கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள். இந்தியாவில் இந்து கலாச்சாரம் அடியோடு அழிக்கப்பட்டது என்ற நல்ல செய்தியை விரைவில் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். பதில் தேவை. இப்படிக்கு போப்"

இத்தாலி ராணி: பார்த்தாயா ஓலையை! இதோ உனக்காக ஒரு வாய்ப்பைத் தருகிறேன். கண்கானாமல் இந்த நாட்டிலிருந்து ஓடி விடு. உயிர் 
மிச்சமாகும். இல்லையேல் நீ செத்து மடியும் காலம் சில வினாடிகளில் வந்து விடும்! என்ன சொல்கிறாய்.

மன்னின் மைந்தன்: அந்நியநாட்டுப் பிசாசே! இத்தனைக்காலம் எங்களை ஆயுதத்தால் அடிமையாக்கினாய்! இப்பொழுது மதத்தால் அடிமையாக்கப் 
பார்க்கிறாய்.  நீ ஒழிந்தால் தான் இந்து தர்மத்தையும் இந்த நாட்டையும் காப்பாற்ற முடியும். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை. எங்கள் 
உணர்வுகளை அவமதிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து விட்டு பின்னால் சாவர்க்கர் காரணம், கோட்சே காரணம், மோடி காரணம், பட்நாயக் காரணம் என்று எங்கள் தலைவர்களை குற்றம் சொல்லிப் பயன் இல்லை. ஏன்னென்றால் நீ அவமதிப்பது எங்களைப் போன்ற அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை. அசைக்கப் பார்ப்பது எங்கள் தாய்மை உணர்ச்சியை. இதற்க்கு நீயும் உன் இத்தாலி நாடும் ஒரு நாள் பதில் சொல்லியேத் தீர வேண்டும் என்பதை மறக்காதே!

இத்தாலி ராணி: சீ மூடனே! உனக்கு சாவுதான் ஒரே முடிவு. இவனை சிரச்சேதம் செய்யுங்கள்.

காவலாளிகள் மன்னின் மைந்தனை அழைத்துச் செல்கிறார்கள். கற்பாறையில் அவன் தாமரைத் தலை வைக்கப்பட்டது. காவலாளி கேட்கிறான். கடைசியாக ஏதாவது சொல்கிறாயா!

ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!

வெற்றிவேல் வீர வேல்! வெற்றிவேல் வீர வேல்!

ஓங்கிய வாள் வேகமாக கீழே இறங்க, குதித்துத் தெறித்தது உதிரம். சிதறி உருண்டது சிகரம். வீழ்ந்தது மன்னின் மைந்தனின் அங்கம். இன்பமாய் இளித்தாள் இத்தாலி ராணி.

புறாவின் கால்களில் கட்டி ஓலை ஒன்றை அனுப்பினாள்...

"மதிப்பிற்குரிய போப் அவர்களுக்கு, 

ஒரு இந்துப் பூச்சி நசுக்கப்பட்டது.  இந்தியா விரைவில் இத்தாலி ராஜ்ஜியம்...! நற்செய்திப் பெருங்கூட்டம் விரைவில் நடக்கும், 

உங்கள் தலைமையில்....!
.

Friday, July 24, 2009

தெருவில் சவ ஊர்வலம் போகும் போது கோவில் கதவுகளை மூடிவிடுகிறார்களே ஏன் ?

பொதுவாக சவ ஊர்வலம் வரும்பொழுது கோவில் கதவை மூடுவது தீட்டுபடக் கூடாது என்று சொல்வார்கள். யாருக்கு தீட்டு கடவுளுக்கா? இல்லை. இறந்து போனவருக்கா? இல்லை.

மனதில் ஒரு குறைபாடு வரக்கூடாது என்று இந்த விஷயம் நடைபெறுகிறது. அந்த பிணத்தோடு போகிறவர்கள், அந்த ஊரைச் சார்ந்தவராக, அந்த இருப்பிடத்தை சார்ந்தவராக இருப்பார்.

தினம் தினம் உன்னை வழிபாடு செய்துக் கொண்டிருக்கிறேனே, என்னுடைய சகோதரனை அல்லது தகப்பனை, அல்லது மகனை, அல்லது நெருங்கிய உறவினனை, நண்பனை பிரித்து எடுத்துக் கொண்டு போய்விட்டாயே. நீ தெய்வமாக இருந்தும் எனக்கு இப்பேர்ப்பட்ட துன்பம் வந்ததே என்று அந்த இடத்தை கடக்கும் போது அந்த கடவுள் மீது கடுமையான ஒரு அவநம்பிக்கை வரும். கடவுள் இல்லை என்று நினைக்கத் தோன்றும்.

வேதனைப்படுகின்ற நேரத்தில் கடவுளைப் பற்றிய அவநம்பிக்கை வந்துவிடக்கூடாது. அது வேரூன்றி விடும் என்பதற்காக அந்த இடத்தை சட்டென்று மறைக்கிறார்கள்.

அந்த இடத்தைக் கடக்கும் போது வெறும் கதவைப் பார்த்துக் கொண்டு அவர் போவார். அதனால் அந்த கடவுள் நம்பிக்கை அவரிடம் அசையாது இருக்கும். அவநம்பிக்கை வராது இருக்கும் என்பதுதான் உண்மை.

- எழுத்துச் சித்தர் திரு.பாலகுமாரன்.


கேயாஸ் தியரியும் இந்து தர்மமும்


இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

Wednesday, July 22, 2009

நான்கு திருடர்கள் - மரியாதை ராமன் கதைகள்

நான்கு திருடர்கள் கூட்டாக பொன்னும் பொருளும் திருடிக்கொண்டு வந்தார்கள். அவைகள் அனைத்தையும் ஒரு தோண்டியில் போட்டு நிரப்பி வைத்தார்கள். அதைப் பத்திரமாக ஓர் இடத்தில் வைக்க ஆசைப்பட்டார்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடத்தைச் சொன்னார்கள். ஒருவர் கூட மற்றொருவர் யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். கடைசியாக நால்வரில் ஒருவன், "நாம் வழக்கமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோமே ஒரு கிழவி வீட்டில் அவளிடம் அதைக் கொடுத்து வைப்போம். நல்ல கிழவி. பத்திரமாகக் காப்பாற்றி வைப்பாள். நாம் நால்வரும் ஒன்றாகச் சேர்ந்து போய் கேட்டால் மட்டுமே தோண்டியைக் கொடுக்கச் சொல்லி அவளிடம் சொல்லுவோம்" என்றான்.

மற்ற மூவரும் நாலாமவன் சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். நால்வரும் பாட்டியிடம் போனார்கள். "பாட்டி, நாங்கள் நால்வரும் பல நாட்களாக உழைத்துப் பாடுபட்டுக் கொஞ்சம் பொருள் சேர்த்திருக்கிறோம். அதை இந்தத் தோண்டியில் போட்டு வைத்திருக்கிறோம். இன்னும் சிறிது காலம் இந்த ஊரில் தங்க வேண்டியுள்ளது. அதற்குப் பிறகு இந்த ஊரை விட்டு நாங்கள் சென்று விடுவோம். அதுவரை இந்தக் குடத்தைப் பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருந்து நாங்கள் போகும் போது கொடுக்கவும். ஆனால் ஒரு நிபந்தனை. நாங்கள் நால்வரும் வந்து கேட்டால் தான் நீ இந்தத் தோண்டியைத் தர வேண்டும். தனியாக யார் வந்து கேட்டாலும் நீ கொடுக்கக் கூடாது. ஏனென்றால் இதில் உள்ள பொருள் அனைத்தும் எங்கள் நால்வருக்கும் சொந்தம்" என்றார்கள்.

பாட்டியும் தோண்டியை வாங்கி வைத்துக் கொண்டு அவர்கள் சொன்னவாரே நால்வரும் வந்து கேட்கும் போது தோண்டியைத் தருவதாகக் கூறினாள்.

சில நாட்கள் சென்றன.

ஒரு நாள் பாட்டி வீட்டில் நால்வரும் சாப்பிட்டு விட்டுச் சற்று தூரத்தில் இருந்த ஒரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அந்த வழியாக மோர் விற்கும் பெண்மணி ஒருத்தி மோர் பானையுடன் வந்தாள். அவளைப் பார்த்ததும் திருடர்களில் ஒருவன், "அண்ணே தாகமாக இருக்கிறது. மோர் சாப்பிடலாமா?" என்று கேட்டான்.

மற்றவர்கள் சரி என்று கூறவே மோர்க்காரியைக் கூப்பிட்டு ஆளுக்கு ஒரு குவளை வாங்கிச் சாப்பிட்டனர்.

"அண்ணே, மோர் நன்றாக இருக்கிறது. இந்த அம்மாளிடம் இருக்கும் மொத்த மோரையும் வாங்கி வைத்துக் கொண்டால் தாகம் எடுக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம்" என்றான் ஒருவன்.

"அது சரி, மொத்த மோரையும் வாங்குவதற்கு நம்மிடம் பானை எதுவும் இல்லையே!" என்றான் ஒரு திருடன்.

"ஏன் நாம் வழக்கமாகச் சாப்பிடும் பாட்டியிடம் ஒரு தோண்டி வாங்கி வரச் சொல்லுவோம்" என்று சொல்லிய மற்றொரு திருடன் தன் பக்கதில் இருந்த திருடனிடம், "நீ போய்ப் பாட்டியிடம் ஒரு தோண்டி வாங்கி வா" என்றான்.

அந்த நொடியில் பாட்டி வீட்டிற்குச் சென்ற திருடனின் மனதில் ஒரு சூழ்ச்சி தோன்றியது. பாட்டியிடம், "பாட்டி நாங்கள் உன்னிடம் கொடுத்து வைத்தோமே, அந்தத் தோண்டியை வாங்கி வரச் சொன்னார்கள்" என்றான்.

"உன்னிடம் எப்படித் தர முடியும்? நீங்கள் நால்வரும் வந்து கேட்டால் தானே கொடுக்கச் சொன்னீர்கள். இப்போது நீ மட்டும் தனியாக வந்து கேட்கிறாயே!" என்றாள் பாட்டி.

"என் பேச்சில் நம்பிக்கையில்லையா பாட்டி, அதோ அந்த மரத்தடியில் தான் எங்கள் நண்பர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நீ வேண்டுமானால் கொஞ்சம் வெளியே வா. அவர்களையே சொல்லச் சொல்கிறேன்." என்றான் அந்தத் திருடன்.

பாட்டி குடிசைக்கு வெளியே வந்தாள்.

திருடன் மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் மூன்று திருடர்களைப் பார்த்து, "பாட்டி தரமாட்டேனென்கிறாள்" என்று உரக்கக் கத்தினான்.

மரத்தடியில் உட்கார்ந்திருந்த மூவரும் "அவனிடம் கொடுத்தனுப்பு பாட்டி" என்றார்கள்.

பாட்டி "தோண்டியா?" என்று கேட்டாள்.

"ஆமாம் பாட்டி தோண்டிதான். சீக்கிரம் கொடுட்தனுப்பு" என்று மூவரும் பாட்டிக்குக் கேட்கும் படியாகக் கத்தினார்கள்.

பாட்டி உள்ளே சென்று பொன்னும் பொருளும் அடங்கிய தோண்டியைக் கொண்டு வந்து ஏமாற்றுக்காரத் திருடனிடம் கொடுத்தாள்.

தோண்டியை வாங்கிக்கொண்ட ஏமாற்றுக்காரத் திருடன் வேறு வழியாக ஓடியே போய் விட்டான்.

வெகுநேரமாகியும் அனுப்பிய ஆள் வராததால் சந்தேகமடைந்த மற்ற மூவரும் பாட்டியின் வீட்டுக்கு வந்தார்கள். "எங்கே அவன்"? என்று பாட்டியிடம் கேட்டார்கள்.

"அவன் அப்போதே தோண்டியை வாங்கிக் கொண்டு போய் விட்டானே!" என்றாள் பாட்டி.

"எந்தத் தோண்டி?" என்றான் மூவரில் ஒருவன்.

"ஏன்? நீங்கள் என்னிடம் கொடுத்து வைத்த தோண்டியைத்தான் வாங்கிக் கொண்டு போனான்" என்றாள் பாட்டி.

இதைக் கேட்டதும் திருடர்கள் மூவரும் பாட்டியை கோபத்துடன் "அதெப்படி நீ அவனிடம் தோண்டியைக் கொடுக்கலாம்? நால்வரும் ஒன்றாக வந்து கேட்டால் தானே நீ கொடுக்க வேண்டும். இப்படி எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டாயே! அதனால் இந்த நஷ்டத்தை நீதான் ஈடு செய்ய வேண்டும்" என்று கூச்சல் போட்டனர்.



விபூதி பூசிக்கொள்வது ஏன்?

பாட்டி அதற்கு மறுக்கவே அவளை நீதிபதியிடம் அழைத்துச் சென்று முறையிட்டனர்.

வழக்கைக் கேட்ட நீதிபதி, "பாட்டி செய்தது தான் தவறு. ஒப்புக்கொண்டதற்க்கு மாறாக ஒருவனிடம் தோண்டியைக் கொடுத்ததால், அவள் தான் அதற்கு பொறுப்பேற்க்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தார்.

வழிநெடுக புலம்பிய படியே நடக்க வழியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனான மரியாதை ராமன் அழுது கொண்டே வரும் பாட்டியிடம் நடந்ததைக் கேட்டறிந்தான். நடந்தவை முழுவதையும் கேட்டறிந்த மரியாதை ராமன் "இது என்ன அநியாயமான தீர்ப்பு, இது சரியல்ல" என்று தனது கருத்தை தெரிவித்தான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அரசாங்க சேவகர்கள் மன்னரிடம் அப்படியே இந்தச் செய்தியைத் தெரிவித்துவிட்டனர்.

அரசன் மரியாதை ராமனை அழைத்து "தமது அரசவையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பையே நீ விமர்சனம் செய்தாயாமே! சரி நீ தீர்ப்பு சொல்லியிருந்தால் இந்த வழக்கில் என்ன தீர்ப்பு சொல்லியிருப்பாய்?" என்று கேட்டார்.

"அரசே, நான்கு பேரும் ஒன்றாக வந்து கேட்டால் தானே பாட்டி அந்தத் தோண்டியைக் கொடுக்க வேண்டும். ஆனால் இப்பொழுது மூன்று பேர் தானே வந்து தோண்டியைக் கேட்கிறார்கள். இவர்கள் மூவரும் போய் நாலாவது ஆசாமியையும் தம்முடன் கூட்டிக் கொண்டு வரட்டும். அப்பொழுது பாட்டி நிச்சயம் அவர்கள் கொடுத்த தோண்டியைத் திரும்பக் கொடுத்து விடுவாள்" என்றான்.

சிறுவன் மரியாதைராமன் அளித்த தீர்ப்பைக் கேட்டு மன்னர் மிகவும் வியந்து போனார்.

ராமனை அப்பொழுதே அரசவை நீதிபதியாக நியமித்தார்.


நமது பாரம்பரிய கதைகளை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமையே ஆகும்.

Sunday, July 19, 2009

இந்து தர்மம் என்றும் வெல்லும்

இந்து தர்மத்தில் எதுவுமே மூடநம்பிக்கை இல்லை என்பதை பலமுறை பல விளக்கங்களுடன் பல அறிஞர்கள் விளக்கி இருக்கிறார்கள். அவற்றை நாத்திகர்களாக இருந்தவர்களே பிற்பாடு அனுபவப்பூர்வமாக வாழ்ந்து பார்த்து ஒத்துக்கொண்டு பின்னர் முழு ஆத்திகர்களாக மாறியிருக்கிறார்கள். இந்து தர்மம் என்பது வாழ்வியல் வழிகாட்டு முறையே அன்றி இது ஒரு ஒரு தனி நபர் ஸ்தாபித்த அடையாள மார்க்கமாக இருக்கவில்லை. இந்து தர்மம் என்பது அறிவியலும் மனோவியலும் சேர்ந்ததே ஆகும்.

இந்தக் கருத்து இன்று அமெரிக்க வின்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா மூலமாகவே நிரூபனம் ஆகியிருக்கிறது. தொலை நோக்கு அறிவியல் கருவிகள் எதுவும் இல்லாமலே சூரியன் உதிக்கும் நேரமும், சந்திரன் மறையும் நேரத்தையும் கூட ஆராய்ந்து சோன்னது இந்து தர்மம்.

சூரிய கிரகனமும் சந்திர கிரகனமும் வெள்ளைக்காரன் சொல்லும் முன்பே பஞ்சாங்கம் சொல்லிவிடும். இந்த அறிவியல் யார் கொடுத்தது. இந்து தர்மத்தின் ஆதாரமே மூடத்தனம் இல்லாத இந்த அறிவியல் விஷயங்கள் தானே. இயற்க்கையோடு ஒன்றிப்போய் ஒன்றாய்க்கலந்து வாழ்ந்த நம்மக்கள் அதற்க்கான அடையாளங்களையும் அந்தப் பொக்கிஷங்களையும் நமக்காக விட்டுப்போனார்கள். அத்தகையப் பொக்கிஷங்களே நம் கண்முன்னே உயர்ந்து நிற்க்கும் கோவில்கள்.

இந்த ஆடி மாதம் ஆறாம் தேதி சூரிய கிரகணம் வரப்போவதை பஞ்சாங்கம் துல்லியமாக நேரம், காலம், நாழிகை முதற்க்கொண்டு சொல்லிவிட்டது. ஆனால் வெள்ளைக்காரன் சொன்னால் தானே நம்மவர்களுக்கு வேத வாக்கு. இதோ வெள்ளைக்காரன் சொன்னதாக வெளியாகியிருக்கும் செய்திகளைப் பார்ப்போம்.

இந்த நூற்றாண்டில் மிக நீண்ட நேரம் நீடிக்கும் சூரிய கிரகணம் இது தான். பிகார் மாநிலம் தரிகானா என்ற இடத்தில் தான் சூரிய கிரகனம் நீண்ட நேரத்திற்கு நிலவும். அதாவது சுமார் இருநூறு கிலோமீட்டர் தொலைவிற்க்கு சூரியனை மறைக்கும் சந்திரனின் நிழல் தெரியும். எனவே சூரிய கிரகணத்தை முழுமையாகப் பார்க்க இது தான் சரியான இடம் என்று நாசா அறிவித்துள்ளது. அதாவது பீகாரில் மாநிலத்தில் தரிகானா என்றொரு இடம் இருப்பதே அவர்களுக்கு இப்போது தான் தெரியும்.

ஆனால் ஆரியபட்டர் என்ற இந்திய வானியல் விஞ்ஞானியாக அறியப்படும் வானியல் மேதை ஆறாவது நூற்றாண்டிலேயே இந்த இடத்தை வானியலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கண்டறிந்திருக்கிறார். அந்த இடத்தில் அவருக்கும் முன்பாகவே சூரியனுக்கு கோவில் கட்டப்பட்டும் இருந்தது அதைவிட விஷேஷம். அந்த இடத்திலிருந்து ஆரியபட்டர் சூரியன் பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்துள்ளார். இது பற்றி பல புத்தகக் குறிப்புகளும் உள்ளன.

விஷயம் என்னவெனில், இந்து தர்மத்தில் கோவில்கள் வெறும் சிலை வைத்து வழிபடும் தளங்களாக மட்டும் இல்லாமல், மனதிற்கு நிம்மதி தரும் இடமாகவும், புவியியல் மாறுதல்களைக் கனித்து பூமியைச் சுற்றியுள்ள கிரகங்களின் அழுத்தம் நாம் வாழும் பூமியில் எந்தப் பகுதியில் பரவிக்காணப்படுகிறது என்பதையும் கணித்தே கட்டப்பட்டுள்ளது என்பதை நாஸா மூலம் மீண்டும் நாம் விளங்கிக் கொள்ள ஒரு வாய்ப்பாகியிருக்கிறது.


தமிழகத்தில் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களும் இதே போன்ற பல நன்மைகள் கருதியே கட்டப்பட்டுள்ளன. கிரகங்களின் சுற்று வட்டப்பாதையில் அந்த இடங்கள் இவ்வாறான புவியியல் முக்கியத்துவம் பெற்றுள்ளன என்பதையே இது காட்டுகிறது. ஆனால் எல்லாவற்றையும் அறிவியல் கொண்டே நிரூபிக்க முடியாது. அது வாழ்ந்து பார்க்கும் போது காலத்தால் மட்டுமே நிரூபனம் ஆகும்.

அவ்வளவு ஏன். ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன், மகாலய அமாவாசை அன்று இறந்து போன முன்னோர்களுக்கு தர்பனம் செய்வார்களே! அப்படி என்ன விஷேஷம் அந்த நாளில் என்று தோன்றும். வருடத்திலேயே சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும் நாள் அது தான். இது புவியியல் ரீதியான உண்மை. மேலும் உண்மை அறிந்தவர்கள் இன்னும் விளக்கலாம். கேட்கத்தயார்.

இன்னும் நிரூபனம் வேண்டும் என்றால், சமீபத்தில் சுனாமி வந்ததே. அப்போது அலைகளுக்கு பக்கத்திலேயே இருந்த திருச்செந்தூர் கோவிலில் சொட்டுத் தண்ணீர் கூடப் படவில்லை. ராமேஸ்வரத்தில் சுனாமி தாக்கவில்லை. இதை எந்த ஊடகங்களும் பெரிது படுத்தாமல் அமுக்கிவிட்டன. ஏனெனில் இது இந்து மதத்தைப்பற்றி இச்செய்தி உயர்வாக சொல்லிவிடுமே. அதுதான் காரணம். ஆனால் உலகையே உலுக்கிய சுனாமி ஏன் இந்த இரு கோவில்களைத் தொடவில்லை. பதில் தெரிந்தால் கூறுங்கள்?

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்!

Saturday, July 18, 2009

நான் மதிப்பிலாதவன்!

ஆதி சங்கரர் ஒரு முறை ஆற்றில் குளித்து விட்டு வெளியே வந்த போது எதிரில் ஒரு சண்டாளன் ஒரு புறம் மீனும் மற்றொரு புறம் இறைச்சிகளும் தொங்க விட்ட படி வந்து கொண்டிருந்தான். இதைப்பார்த்த ஆதி சங்கரர், அந்த சண்டாளனிடத்தில் "விலகிப் போ" என்று கூறினார்.

உடனே எதிரே இறைச்சிகளுடன் இருந்த அவன் கேட்டான் "விலகிப் போக வேண்டியது என் உடலா? அல்லது என் ஆத்மாவா?". ஆதி சங்கரருக்கு அப்பொழுது தான் அத்வைதத் தத்துவமே விளங்கியது. இந்த உடல் வேறு, ஆத்மா வேறு. உடல் என்பது ஆத்மா வந்து குடியிருக்கும் ஒரு ஒரு கருப்பை தானே ஒழிய இந்த ரூபமே நான் ஆகாது என்று.

உடனே ஆதி சங்கரர் அந்த சண்டாளன் கால்களில் விழுந்து நீயே என் குரு என்று அவனை குருவாகவே பாவித்தார். பிறகு, இதையே தத்துவ மார்கமாக உலகுக்கு போதிக்கத் துவங்கினார் ஆதி சங்கரர். "பஜகோவிந்தம்" என்ற பாடலை எழுதி அதாவது, இறைவனை நினைத்திரு மூடனே அதுதான் நிரந்தரமனது. மற்றெல்லாம் மாயை என்பதை உலகிற்க்கு அழகாக விளக்கினார். (இங்கே)


ஆம் இந்த உடல் என்பது வெறும் பிண்டம் தான். அதில் ஆத்மா என்ற ஒரு சலனமற்ற பொருள் தான் எல்லாவற்றையும் உணர்கிறது. அவற்றை நாம் அமைதியாகவும் முழுவதுமாகவும் உணர்ந்து வாழவேண்டும் என்பதையே எல்லா ஆன்மீக தத்துவங்களும் நமக்கு போதிக்கின்றன. நான் என்ற அகங்காரம் விலக நான் என்று நாம் நினைப்பது எதை என்ற ஆத்ம விசாரத்திற்க்கு ஒவ்வொரு மனிதனையும் தூண்டுவது இந்தத் தத்துவமே.

ஒரு முறை மெளரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர் நகர்வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிக்ஷு, மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு ஓரமாக நின்று கொண்டிருந்தார்.

அசோகச் சக்ரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார். 'ஒரு அரசர் பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பரியக் கவுரவம் என்னாவது?" என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது. அரண்மனை சென்றதுமே அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்ப்டுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார்.

அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார். "ஓர் ஆட்டுத் தலை, ஓர் புலியின் தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்" என்று.

மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும், அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர். ஆட்டுத்தலை கிடைக்க அதிக சிரமமில்லை. புலித்தலையை ஒரு வேட்டைக்காரனிடம் பெற்றனர். மனிதத்தலைக்குத்தான் கொஞ்சம் சிரமம். அதையும் மன்னரின் கட்டளை என்கிறபடியால் ஒரு சுடுகாட்டிலிருந்து கொண்டு வந்து விட்டனர்.

இப்பொழுது மன்னர் மீண்டும் கட்டளையிட்டார். இவற்றைச் சந்தையில் விற்று காசாக்குங்கள் என்று. அமைச்சர் திகைத்தவாறே அதைச் செய்யச் சொன்னார். வழக்கம் போல், ஆட்டுத்தலை அதிகச் சிரமம் இல்லாமல் விற்றுப் போனது. புலித்தலையை ஒரு செல்வந்தன் அலங்காரப் பொருளாக பாடம் செய்து வைக்க வாங்கிச் சென்றான்.

ஆனால் மனிதத் தலையைக் கண்டதும் மக்கள் அலறியடித்து ஓடினர். யாரும் வாங்க முன் வரவில்லை. அது மட்டும் போனியாகவில்லை. மன்னரிடம் முறையிட்டார்கள். மன்னர் அதனை வேண்டுவோர்க்கு இலவசமாகவே கொடுங்கள் என்று கட்டளை பிறப்பித்தான்.

அது இன்னும் சங்கடத்தை உண்டாக்கியது. இலவசமாகக் கொடுத்தும் யாரும் மனிதத்தலையை வாங்கவில்லை.

இப்போது அசோகர் கூறினார். "பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய் விட்டால் இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட யாரும் தொட மாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!. செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால் உடம்பில் உயிர் இருக்கும் போதும், தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள் தான் ஞானிகள்.

அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு? சொல்லப்போனால் அது தான் ஞான வழியின் முதல் படி!" என்றார்.

ஆம்! செத்த பிறகு நம் உடல் எப்படி மதிப்பில்லையோ, உயிர் இருக்கும் போது மட்டும் அது எந்த விதத்தில் மதிக்கத்தக்கது என்பதை ஆராய்வதே ஞானத்தின் முதல் படி.

நம்மிடம் உள்ள பணம் , பொருள், புகழ், அதிகாரம் இவை யாவும் இந்த மதிப்பற்ற ஒரு உடலுக்கு எந்த விதத்தில் மதிப்பைச் சேர்த்துவிடுகிறது என்று சுய ஆராய்ச்சியில் ஈடுபடுவதே உண்மையான ஞான மார்க்கத்தின் முதல்ப்படி!

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவனிடம் கர்வம் இருக்காது.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் எல்லோரையும் மதிக்கக் கற்றுக்கொள்வான்.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் உற்றார் உறவினரிடம் உண்மையான அன்பு காட்டுவான்.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் நண்பர்களிடத்தில் அன்பைப் பெறுவான்.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் இயற்க்கையோடு வியாபித்து வாழ்வான்.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் இந்தப் பிரபஞ்சத்தை முழுமையாக அனுபவிப்பான்.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் ஆத்மாவில் உயர்ந்தவனாக காணப்படுவான்.

ஆம் நானும் புரிந்து கொண்டேன். நான் மதிப்பில்லாதவன் என்று!

Saturday, July 11, 2009

மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்து மதம்?

உலகின் எல்லா நாடுகளுக்கும் மதம் உண்டு. இந்தியாவிற்க்கு மட்டும் மதம் கிடையாது. ஆனால் இந்த நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக ஆக்க வேண்டும் என்று அரபு நாடுகளும், கிறிஸ்தவ நாடாக ஆக்க வேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பிய நாடுகளும் கங்கனம் கட்டி வேலை செய்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகத்திற்க்கு இந்து மதம் தவிற வேறெதுவும் தெரியாது. இந்து மதத்திற்கே அந்தப் பெயர் கிடையாது. இந்து என்பது வாழும் தர்மம். ஆனால் இந்த தர்மம் மதமாக்கப்பட்டு இப்போது மதமாற்றமும் செய்யப்பட்டு வருகிறது.

உதாரணமாக கிறிஸ்து கால அட்டவணைப்படியான முதலாம் நூற்றாண்டில் ஐரோப்பவிலும் இரண்டாம் நூற்றாண்டில் அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளிலும் கிறிஸ்தவம் பரப்பப்பட்டது போக, மூன்றாம் நூற்றாண்டில் அதே நிலை வலுவான ஆசியா கண்டத்திலும் ஏற்பட்டது. இவ்வாறு மதம் மாத்தும் தொழில் செய்பவர்கள் மிஷனரிகளை உருவாக்கினர். இந்த மிஷனரிகள் தான் அதி வேகமாக உலகம் முழுவதிலும் மனிதர்களை மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

கிறிஸ்தவ‌ மதத் தொடர்பு ஆதியில் இல்லாதிருந்த நாடுகளில் மதமாற்ற அவலத்தால் அந்நாட்டு ஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவில் மாறியது என்பதை சற்று பாருங்கள். அங்கோலா 90%, கிழக்கு தைமூர் 98%, ஈக்டோரல் 94% , புருண்டி 78%, மத்திய ஆப்ரிக்க ரிபப்ளிக் 82%, காங்கோ 62% , எத்தியோப்பியா 52%, கபான் 79%, லைபீரியா 68%, நைஜீரியா 52%, பிலிப்பைன்ஸ் 84% தென் ஆப்பிரிக்கா 78% , உகாண்டா 70% ஜையர் 90%.

இவ்வாறு மதம் மாற்றப்பட்ட பெரும்பாலான நாடுகளில் அடிப்படையில் பெரிய கலாச்சாரமோ அல்லது மதங்களோ இல்லாமல் இருந்ததால் அவர்களால் இதை எளிதில் சாதிக்க முடிந்தது. ஆனால் இந்தியாவில் பல ஆயிரக்கனக்கான வருடங்கள் பாரம்பரியமுள்ள மதமும் வாழ்வியல் தர்மங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கேயே இவ்வளவு வேகமாக பரப்பப்படுகிறது.

இந்தியாவில் ஏறக்குறைய 4000 மிஷனரிகள் பல மாநிலங்களில் தீவிரமாக மதமாற்றம் செய்து வருகின்றன. சுதந்திர போராட்ட காலத்தில் திரிபுரா மாநிலத்தில் கிறிஸ்தவர்களே கிடையாது. இன்று அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.2 லக்ஷம். அதே போல அருணாசல பிரதேசத்தில் 1921 இல் 1770 கிறிஸ்தவ்ர்க‌ளாக இருந்தவர்கள் இன்று 12 லக்ஷம். அங்கு சர்சுகள் மட்டும் 780 உள்ளன. இது போன்றே வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் தீவிரமாக மதமற்றம் நடைபெறுகிறது. ஆந்திராவில் நாளொன்றுக்கு ஒரு சர்ச் கட்ட வேண்டும் என்ற டார்கெட்டில் மத மாற்றம் நடைபெறுகிறது.

இத்தகைய மதமாற்ற தொழிலில் ஈடுபடும் மிஷனரிகளுக்கு அமெரிக்கவிலிருந்து மட்டும் ஆண்டுக்கு 75000 கோடி ரூபாய்கள் வருகிறது என்கிறது புள்ளிவிபரம். யோசித்துப் பாருங்கள் . வெறுமனே ஒருவனை இந்த சாமியைக் கும்பிடு என்றால் எப்படிக் கும்பிடுவான். அதனால் அவனுக்கு ஆதாயம் அதிகமாக இருந்தால் தானே மாறப்போகிறான். அந்த ஆதாயத்தை கொடுக்கவே இந்த பண பரிவர்த்தனை. சம்மந்தமே இல்லாமல் உங்கள் வீட்டருகே விலைவாசி உயர்ந்தால் அதற்க்கு இந்த பணப்புழக்கமும் ஒரு காரணம்.

180 தலைப்புகளில் பிரச்சார துண்டுப் பிரசுரங்கள், கட்டுரைகள், புத்தகங்கள் ஆகியவை 300 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் இந்துக்கடவுளர்களை சாத்தான்கள், கிறிஸ்தவத்தை கடைபிடிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்றும் மிரட்டும் வாசகமே அதிகம் இருக்கும். சராசரியாக ஒரு மனித மத மாற்றத்திற்க்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. மதமாற்றம் தொய்வின்றி நடக்க மிஷனரிகளுக்கு நிலங்கள் கட்டிடங்கள் என்று நிலைச்சொத்துக்களும் , அவற்றை நடத்துபவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு தேவையான அளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

1500வது வருடத்திலேயே 30 லட்சம் மிஷனரிகள் உருவாகியிருந்த நிலையில், இன்று 65 கோடி மிஷனரிகள் முழுவேகச் செயல்பாட்டில் உள்ளன. இதில் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவற்றில் பாதி இந்தியர்களாலேயே நடத்தப்படுகிறது. சுக போகத்திற்கும் பணத்திற்க்கும் ஆசைப்பட்டு விலை போனவர்கள் தான் இவர்களில் அதிகம்.

மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதம் தான் அதிகம் அழிவுக்கு உள்ளாக்கப் படுகிறது. இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நம் சொந்த கடவுளரை இழிவு படுத்துவதை பகுத்தறிவு என்ற பெயரில் செய்து வருகிறார்கள் .அதாவது நம் கண்ணைக் குத்திக் கொள்ள நம் விரல்களையே பயன்படுத்தும் அளவிற்க்கு நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள். இவற்றை யெல்லாம் சிந்திக்க வேண்டும். இந்து தர்மத்தை பாதுகாப்பது இந்த தர்மத்தைக் கடைபிடிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள தார்மீக உரிமையாகும். கடமையும் கூட.

யோசியுங்கள்...

இப்தார் விருந்தில் கலந்து கொள்ளும் கருணாநிதி இஸ்லாத்தில் தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அதே ராமர் பால பிரச்சனை வரும் போது கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் கடவுளை அவமதித்துப் பேசுகிறார்.

இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்...

வேறு எந்த மதத்தின் சம்பிரதாயங்களையும் காயப்படுத்தாத அரசியல் வாதிகள் இந்து தர்மத்தின் பண்டிகைகளை தங்கள் இஷ்டத்திற்க்கு மாற்றியமைப்பது எதற்க்காக. அதுவும் தமிழ் புத்தாண்டை ஆங்கிலப்புத்தாண்டு காலத்துடன் இணைக்க முற்ப்படுகிறார்கள்.

இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்...

தரங்கம்பாடி கடற்க்கரையில் டச்சுக் கோட்டை அருகிலே ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த சிவன் ஆலயம் இடிந்த (இடிக்கப்பட்ட?) நிலையில் வெறும் சிவன் சந்நிதி மட்டும் பூட்டப்பட்டு காட்சி அளிக்கிறது. ஆனால் அதற்குப் பக்கத்திலே ஆடம்பரமாக தேவாலயங்கள் தினந்தோறும் பிரார்தனைகளுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

அந்த ஊரில் இந்த சிவன் ஆலயத்தை செப்பனிடவும் அந்த பழமையின் சின்னத்தைக் காக்கவும் அரசு முன்வரவில்லை. அப்படியே ஊர் மக்கள் முன் வந்தாலும் தமது செல்வாக்கை வைத்து இந்த மிஷனரிகள் தடுத்து விடுகின்றன. பழமையின் சின்னம் என்ற பெயரில் டச்சுக் கோட்டையின் மேல் அரசு காட்டும் அக்கறை, இந்த சிவன் கோவில் மேல் ஏன் காட்டப்படுவதில்லை.

இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்...

மிஷனரிகள் இந்தியாவில் நிலங்களும் கட்டிடங்களும் வாங்கிக் குவிக்கும் வேலையில் , நம்மூர் அரசியல் வாதிகள் இந்து மத கோவில் நிலங்களை விற்று காசாக்குகிறார்கள். இதே நடவடிக்கைகளை முஸ்லீம்களின் வஃக்போர்டு நிலங்களின் விஷயத்தில் செய்வார்களா?

இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?


யோசியுங்கள்...

குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்களில் இந்துக்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறார்கள். அதாவது இந்து அடையாளத்துடன் இருக்கும் ஆண் , பெண் மட்டுமே. வேறு எந்த மதத்தினரும் காண்பிக்கப்படுவதில்லை. இந்துக்கள் மட்டுமே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் மக்கள் தொகை பெருகினால் பரவாயில்லையாம்.

இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே!

யோசியுங்கள்...

வசிக்க இடமில்லாத ஒரு பிக்பாக்கெட், போலீஸைக் கண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும் ஒரு ரவுடி கூட பாதிரியாராக மாறி விடுகிறான். அவனுக்கு சொந்த பங்களா, கார் என்று வசதிகள் வந்து விடுகின்றது. இன்னும் வேகத்துடனும் ஆர்வத்துடனும் அவன் மத மாற்றத்தில் ஈடுபடுகிறான்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம். கோவிலில் பூஜை செய்வதே குலத்தொழிலாக நம்பியிருக்கும் பிராமணர்களை தொடர்ந்து வறுமையிலேயே வைத்திருக்கிறோம். அவர்களை விரட்ட வேண்டும் அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும் கூவிக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தட்டில் போடும் இரண்டு ரூபாய் காசுக்கு சட்டம் பேசுகிறோம்.

இந்து தர்மம் வளர்வதற்க்கு இது உதவுமா?

நாம் வேறு மதத்தவரை அவமதிக்க வேண்டாம். மற்றவர்களை புன்படுத்துவது நம் தர்மமும் அல்ல‌. குறைந்த பட்சம் நமது மத அடையாளங்கள் அவமதிக்கப்படாமலாவது பார்த்துக் கொள்ள வேண்டாமா? சில விஷயங்களையாவது தவறாமல் கடைபிடியுங்கள்.

விபூதி குங்கும போன்ற மத அடையாளங்களை பூசிக்கொள்ள வெட்கப்படாதீர்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு இந்து தர்மம் பற்றியும் அதன் சிறப்பைப் பற்றியும் முடிந்த வரை எடுத்துச் சொல்லுங்கள்.

இந்து மதப் பண்டிகைகளை ஆர்வத்துடனும் கோலாகலமாகவும் கொண்டாடுங்கள்.

நமது கோவில்களை சீர்படுத்த நம்மால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள்.

ஜாதிக்கட்டுகளை விட்டு இந்துவாக இருப்பவர்கள் எல்லோரும் ஒன்று என்று பழக முற்படுவோம். ஒருவருக்கொருவர் கலப்புத் திருமணம் செய்து சம்பந்தியாகத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் நண்பர்களாகவாவது இருப்பது அவசியம் என்று நினைக்க வேண்டும்.

இப்படி நம் சொந்த மதத்தை நாம் மதித்து பாதுகாக்க முற்ப்பட்டால் அடுத்த தலைமுறைக்கு நம் கலாச்சாரத்தைக் கொண்டு போக முடியும். இல்லையேல் நம் கண்முன்னே நம் மண் நம்மிடமிருந்து பறிக்கப்படலாம்.

விழிப்புணர்வு தேவை.

யோசியுங்கள்.....இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.