Saturday, July 24, 2010

பஞ்சதந்திரக் கதைகள் - 7 காக்கை பாம்பை கொன்ற கதை



ஒரு பெரிய மரம். அதில் ஆணும், பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்தன. ஒருநாள் அம்மரத்திலிருந்த பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந்ததோடு காக்கை இடும் முட்டைகளை யெல்லாம் ஒவ்வொரு நாளும் காலி செய்து கொண்டு வந்தது.

பலநாட்கள் இப்படியே கழிந்தன! காக்கைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கருனாகத்தைக் காக்கை என்ன செய்ய முடியும்?, அதற்காக விட்டுவிட முடியுமா, விடலாமா?.

ஒரு நரியாரிடம் ஆலோசனை கேட்டது. நரி சரியான யோசனை ஒன்றைச் சொன்னது. ” அந்தப்புரத்தில் அரசகுமாரி குளிக்கிற இடத்துக்குப் போ. அவள் குளிக்கும்போது நகைகளைக் கழட்டி ஒரு பக்கம் வைப்பாள். அந்த ஆபரணங்களில் பெரியதான ஒன்றை எடுத்துக்கொள். பலர் பார்க்கும்படி மெல்லப் பறந்து வந்து அவர்கள் எதிரில் அந்த நகையை பாம்பு இருக்கும் பொந்தில் போட்டு விடு என்றது”.



காக்கை தாமதிக்கவில்லை. பறந்தது அந்தப்புரத்துக்கு. பார்த்தது அரசகுமாரியின் நகைகளை. ஒரு முத்துமாலை அதன் கண்ணை உறுத்தியது. அதையே கொத்தி எடுத்தது.

அங்கு இருந்த அரசகுமாரியின் தோழிகள், ஆ! காக்கை முத்துமாலையைக் கொத்திட்டுப் போகுது என்று கத்தினர். உடனே சேவகர்கள் ஓடி வந்தார்கள். காக்கை மெதுவாக அவர்கள் கண்ணில் படும்படியே பறந்தது. அவர்கள் அருகில் வந்ததும் பார்க்கும்படி அந்த முத்துமாலையை பாம்பு இருக்கும் பொந்தில் போட்டது.

உடனே சேவகர்கள் தம் கையிலிருந்த ஈட்டிகளால் அந்தப் பொந்தைக் குத்திக் கிளறினார்கள். உள்ளே இருந்த பாம்பு சீறி வெளியே வந்தபோது அதையும் கொன்றார்கள். சேவகர்கள் முத்துமாலையுடன் அரன்மனை நோக்கிச் சென்றார்கள். சரியான யோசனையால் நிறைவான பலனை அடைந்த காக்கைத் தம்பதிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன.

நீதி: விவேகத்தோடு கூடிய வேகமே வெல்வதற்கு வழி!
------------------------------------------------------------------------------------------------------------------------------------


ஹா ஹா...நாங்கள்லாம் பயப்படமாட்டோம்ல!



1 comment:

Anonymous said...

I was stuck-up with an issue and I dont know how to handle :-). Thank you somuch, I will use this technique.