Thursday, October 18, 2012

பிறவிக் கடலை கடக்க உடலே ஓடம்!



உத்தவர் கேட்கிறார்.."பரந்தாமா! முக்தியை விரும்புகிறவன் உம்மை எப்படி எந்த ரூபத்தில் தியானிக்க வேண்டும்?

அந்தத் தியான முறையை எனக்கு உபதேசித்தருள வேண்டும்" என்றார்.

பகவான் கூறலானார்.. ப்ரிய உத்தவ! சமமான் ஆசனத்தில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, கைகளள மடி மீது வைத்து புருவ மத்தியில் பார்வையை நிலை நஅட்டி, ப்ராணாயாமம் ச்எய்து ப்இரணவ சக்தியைப் புருவ மத்தியில் நிலை நாட்ட வேண்டும்.

இவ்வாறு தினந்தோறும் மூன்று வேளைகளிலும் பிரனவ ஜபத்துடன் இராணாயாமத்தைப் பத்து முறை செய்து வந்தால் ஒரு மாத காலத்தில் மனம் அடங்கி சுவாசத்தை வெற்றி கொள்ளலாம். அப்பொழுது எட்டு இதழ்களும், கர்ணிகையும் கொண்ட இதயத் தாமரையை மேல் நோக்கி மலர்ந்திருப்பதாக பாவித்து அங்கே சூரியன் சந்திரன், அக்னி இவைகளை முறையாகத் தியானித்து, அக்னியின் நடுவே தியானத்திற்கு உகந்ததான எனது திவ்ய மங்கள வடிவத்தை நிணைக்க வேண்டும்.

சியாமள நிற மேனியில் பீதாம்பரம் தரித்து , சதுர்புஜங்களில் சங்கு , சக்ர , கதா பத்மங்களுடன் விளங்குகின்றதும், மகர குண்டலங்களுடன் மங்களமான சாந்தமான பரிசுத்தமான புன்னகை தவழுகின்ற ஸர்வாங்க சுந்தரமான மனதிற்கினியதாக விளங்குகின்ற எனது திவ்ய ரூபத்தை, எனது எல்லா அவயங்களிலும் தனித்தனியே முறையாக மனத்தை நிலை நிறுத்தி தியானம் செய்ய வேண்டும். முடிவில் புன்சிரிப்புடன் கூடிய முக மண்டலத்தைத் தியானிக்க வேண்டும். சித்தத்தை வேறு எதிலும் செலுத்தக் கூடாது"

"உத்தவ! மேலும் கேள்!  என்னையே இடைவிடாமல் பக்தியுடன் தியானிப்பவன் எனது பாவனையைப் பெறுவதால், அவனுடைய கட்டளைகள் வீணாகப் போவதில்லை. தோல்வியும் அடைய மாட்டான். அந்தப் புருஷனை ஒருவராலும் ஜெயிக்க முடியாது.

இப்பிறவிக் கடலைக் கடப்பதற்குச் சிறந்த ஓடமாக இருப்பது மனித சரீரமே ஆகும். அதைச் செலுத்தும் படகோட்டியாக சிறந்த குருவும், எனது அருள் என்கிற காற்றும் இருக்கும் போதே எவன் என்னைத் தியானித்துப் பிறவிக் கடலைக் கடக்க முயற்சிக்கவில்லையோ அவன் தனது ஆத்மாவையே கொன்றவனாகிறான்" என்றார் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.

- ஸ்ரீமத் பாகவதம்

No comments: