Wednesday, March 25, 2009

இந்து தர்மத்தில் எல்லோரும் விபூதி பூசிக்கொள்வதன் அர்த்தம் என்ன?

விபூதி பூசிக்கொள்வதன் அர்த்தம்

வெண்மையான இந்த விபூதிப் பொடியானது பசுவின் சானத்தை எரிப்பதன் மூலம் கிடைக்கும் வெண்சாம்பலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பூமியில் பிறக்கும் எந்த ஒரு மனிதரும் இறுதியில் சாம்பலாக வேண்டியது தான் என்பதை எப்பொழுதும் நமது சிந்தனையில் இருத்தி வைப்பதன் மனோவியல் ரீதியான நடவடிக்கையே இந்த விபூதி பூசும் பழக்கம். அதாவது சிம்பாலிக் மெஸ்ஸேஜ் என்று சொல்லலாம்.

அரசன் முதல் ஆண்டி வரையில் எல்லோருக்கும் முடிவு ஒன்று தான். அது தான் சாம்பல், கடைசியில் சாம்பலாகப் போகும் நமது மாய வாழ்க்கையை, விபூதி நமக்கு உணர்த்துகிறது. வைஷ்ணவர்கள் இதையே திரும‌ண் என்று இட்டுக்கொள்வார்க‌ள்.ம‌ண்ணிலே பிற‌ந்த‌ நாம், ம‌ண்ணிலேதான் ம‌டிய‌ப்போகிறோம் என்ப‌தை ந‌ம‌க்கு நாமே நினைவு ப‌டுத்திக் கொள்வ‌து தான் இத‌ன் நோக்க‌ம்.!

இன்னும் விள‌க்க‌மாக‌ச் சொல்ல‌ வேண்டும் என்றால், தீயில் இட‌ப்ப‌டும் பொருள்க‌ள் யாவும் க‌ருகிப்போகின்ற‌ன‌. அத‌ன் பின்னும் இன்னும் தீயிட்டால், அது நீற்றுப் போய் வெளுத்து விடுகிற‌து. அதுவே இந்த‌ பூமியில் உள்ள‌ எல்லாப்பொருட்க‌ளுக்கும் இறுதி நிலை, மாறாத‌ நிலையாகும்.
எல்லாம் அழிந்த‌ பின்னும், அழியாத‌ ச‌த்திய‌மாக‌ நிற்க்க‌க் கூடிய‌ நிர‌ந்த‌ர‌மான‌ உருக்கொண்ட‌வ‌ன் இறைவ‌ன் என்ப‌தை ஆத்மார்த்த‌மாக‌ உண‌ர்ந்து அவ‌னை நினைக்க‌ வேண்டும் என்ப‌தாகும். மெய்யான‌ ஆத்மாவுக்கு அடையாள‌மாக‌ இதை பெரியோர்க‌ள் கூறுகின்ற‌ன‌ர். இந்த‌ உட‌ல் பொய்யான‌து என்ப‌தையும் நிர‌ந்த‌ர‌மான‌ அமைதி எதுவோ அது தான் உண்மை என்ப‌தும் ந‌ம்மை அறியாம‌லே ந‌ம் ம‌ன‌தில் ப‌திய‌வும் இந்த‌ விபூதி பூசும் ப‌ழ‌க்க‌ம் ம‌னோவிய‌ல் ரீதியாக‌ உத‌வுகிற‌து.


"விற‌குக் க‌ட்டையை அக்னி சாம்ப‌லாக்குவ‌து போல‌, அக்னி எல்லாக் க‌ரும‌ங்க‌ளையும் சாம்ப‌லாகுகிற‌து" என்ப‌து கீதையில் கூற‌ப்ப‌ட்டுள்ள‌து. அதாவ‌து நாம் வாழும் இந்த‌ வாழ்க்கையில் ந‌ம்மால் செய்ய‌ப்ப‌டும் ந‌ன்மை தீமை போன்ற‌ எல்லா காரிய‌ங்க‌ளையுமே 'கர்மா' என்ற‌ழைக்கிறோம். இந்த‌ ந‌ம‌து செய்கைக‌ளினால் ந‌ம‌க்கு ஏற்ப‌டும் ந‌ல்விளைவு அல்ல‌து தீய‌ விளைவு அதாவ‌து ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ள் செய்வ‌தால் ஏற்ப‌டும் விளைவு ந‌ல்ல‌ விளைவு என‌வும் நாம் செய்த‌ தீய‌ காரிய‌ங்க‌ளால் ஏற்ப‌டும் விளைவு தீய‌ விளைவுக‌ள் என‌வும் குறிப்பிடுகிறோம். இவையே க‌ர்ம‌ வினைக‌ளாகும். இந்த‌ விளைவுக‌ளில் ந‌ல்ல‌ விளைவு அதிக‌மாக‌ இருந்தால் நாம் புண்ணிய‌ம் செய்திருக்கிறோம் என்றும், தீய‌விளைவுக‌ள் அதிக‌ம் இருந்தால் நாம் பாவ‌ம் செய்திருக்கிறோம் என‌வும் கூறுவ‌ர். இவ்வாறான‌ க‌ர்மாக்க‌ளை அக்னி எரித்து விடும் என்ப‌தும், அவ்வாறு எரித்த‌ பின் எஞ்சி நிற்ப‌து ஞான‌ம் தான் என்ப‌தையும் இந்த‌ விபூதி ஒரு க‌ண்ணால் பார்க்க‌க்கூடிய‌ அடையாள‌மாக‌ உள்ள‌து.


மதமாற்றம் ஜாக்கிரதை


இத‌ற்கும் மேலாக‌ விபூதி என்ப‌து ஏற்க‌ன‌வே சொன்ன‌து போல் ப‌சுவின் சாண‌‌த்தை நெருப்பிலிட்டு, சாம்ப‌லாக்கிச் செய்ய‌ப்ப‌டுகிற‌து. ப‌சுவின் சாணம் தரையில் காயும் போது துர்நாற்றம் வீசுமே ஒழுய எரித்தால் அதற்கு மாறான வினையைக்கொடுக்கும் ஒரு அற்புதப் பொருள்.இது எரித்து சாம்பலாக உபயோகப்படுத்தினால் ப‌ல‌ துர்நாற்ற‌ங்க‌ள‌ப் போக்கும் த‌ன்மையை அடைகிற‌து. இது ஒரு 'ஆன்டி செப்டிக்' என்று கூட‌ச் சொல்ல‌லாம். அதாவ‌து ஒரு கிருமினாசினி.

கிராம‌ங்க‌ளில் பெண்க‌ள் அதிகாலை வாச‌ற் தெளிக்கும் போது ப‌சுவின் சாண‌த்தை த‌ண்ணீரில் க‌ரைத்து தெளிப்ப‌தைப் பார்த்திருப்பீர்க‌ள்!. இது ஒரு கிருமினாசினி என்ப‌தை உண‌ர்ந்து நாம் அதை ஒரு வாழ்க்கை வ‌ழ‌க்க‌மாக‌வே வைத்திருக்கிறோம். இதை எரித்து சாம்ப‌லாக்கும் போது உட‌லைச் சுத்த‌ப்ப‌டுத்துவ‌து போல‌ உள்ள‌த்தையும் சுத்த‌ப்ப‌டுத்துகிற‌து. மேலும் நெற்றியில் பூசிக்கொள்ளும் போது அதிக‌மாக‌ த‌லை நீர் த‌ங்குவ‌தையும் த‌டுக்கிற‌து.


இப்ப‌டி உட‌லையும் ம‌ன‌தையும் ஒருசேர‌ சுத்த‌மாக‌ வைத்திருப்ப‌த‌ற்க்காக‌வே ந‌ம் முன்னோர்க‌ள் விபூதி பூசும் ப‌ழ‌க்க‌த்தை வைத்திருக்கிறார்க‌ள். நாமும் அதை க‌டை பிடிப்போமாக‌.

ஆதலால் சொல்கிறேன் இந்து த‌ர்ம‌ம் என்ப‌து ம‌னோவிய‌லும், அறிவிய‌லும் ஆகும்.


2 comments:

சங்கர் said...

அப்புறம் ஏன் சார் வீட்டு கதவு ஜன்னலுக்கெல்லாம் விபூதி பூசுறீங்க?

gopalswami said...

vibuthi is a very good adsorbent. so it can adsorbe the waste created in our head.
gopal