Sunday, December 12, 2010

ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்!


"உயர்ந்தது மற்றும் சதாரணமானது என்று இரண்டு வகை அறிவுகள் உள்ளன. இவற்றை அறிய வேண்டும் என்று இறையனுபூதி பெற்ற மகான்கள் கூறுகிறார்கள்.
ரிக்வேதம், யஜுர்வேதம் சாம வேதம் அதர்வண வேதம், உச்சரிப்பு, சடங்குகள், இலக்கணம், அகராதி, யாப்பு, வானவியல், ஜோதிடம் போன்றவை சாதாரண அறிவைச் சேர்ந்தவை. அழிவற்ற இறைவன் எந்த அறிவால் அடையப்படுகிறாரோ அது உயர்ந்த அறிவு என மகான்கள் கூறுகிறார்கள்".

அதாவது வேதங்களும் சடங்குகளு சாதாரண அறிவைச் சேர்ந்தவை. அவை ஒன்றே இறைவனை
அடையப் போதுமானவை அல்ல. இறைவனை அடைய அதையும் விட உயர்ந்த அறிவு ஒன்றிருக்கிறது. பயிற்சியால் அதனைப் பெற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

விவேகானந்தரிடம் ஒரு முறை 'வேதங்களின் சிறப்பு என்ன?' என்று கேட்கப்பட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.."தங்கள் போதனைகளையும் கடந்து செல்ல வேண்டும் என்று திரும்ப திரும்ப வறுபுறுத்துகின்ற சாஸ்திரம் அது ஒன்றே. தாங்கள் போதிப்பவை எல்லாம் வெரும் குழந்தை உள்ளத்திற்கே, நீ வளர்ந்ததும் அவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்கின்றன வேதங்கள்" என்றார் சுவாமி விவேகானந்தர்.

"அந்த இறைவனைப் பார்க்க முடியாது, புரிந்து கொள்ள முடியாது. அவருக்கு ஆரம்பம் கிடையாது. அவர் நிறங்கள் அற்றவர். அவருக்குக் கண்களோ காதுகளோ கைகளோ கிடையாது. அவர் என்றென்றும் இருப்பவர், எண்ணற்ற வடிவங்கள் உடையவர், எங்கும் நிறைந்தவர், மிகவும் நுண்ணியவர், அழிவற்றவர், படைப்பிற்கு மூலக்காரணமானவர், விழிப்புற்றவர்கள் அவரை எங்கும் காண்கிறார்காள்."

'அந்த இறைவனைப் பார்க்க முடியாது' என்று முதல் வரியும், 'விழிப்புற்றவர்கள்

அவரை எங்கும் காண்கிறார்கள்' என்று கடைசி வரியும் முன்னுக்குப் பின் முரண்போல் ஒலிக்கின்றன.

அவை விளக்க நினைப்பது இதைத்தான். நமது அறிவு புலன்களுக்குட்பட்டது. புலன்களின் மூலமே நாம் எதையும் அறிந்துகொள்றோம். ஆனால் இறைவன் புலன்களுக்கு அப்பாற்பட்டவர். புலன்களால் அவரைக் கிரகிக்க முடியாது.

அதனால் தான் ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனிடம் 'உனது இந்தக் கண்ணினால் என்னைப் பார்க்க முடியாது. எனவே உனக்கு தெய்வீகக் கண்ணணத் தருகிறேன். எனது யோக சக்தி மகிமையைப் பார் என்கிறார். அவ்வாறு ஞானக்கண்ணைப் பெற்ற அர்ஜுனன் கடவுளை எங்கும் கண்டான். அவ்வாறு ஞானம் பெற்றவர்களையே விழிப்புற்றவர்கள் என்று கூறுகிறார்கள். விழிப்புற்றவர்களே இறைவனைக் காண்பார்கள்!

- முண்டக உபநிஷத்து!



No comments: